தமிழ்நாடு

கிறிஸ்துமஸ் : சென்னையில் உள்ள தேவாலயங்களில் தீவிர கண்காணிப்பு; பாதுகாப்பு பணியில் 8000 போலீசார்!

சென்னையில் உள்ள தேவாலயங்களில் போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் : சென்னையில் உள்ள தேவாலயங்களில் தீவிர கண்காணிப்பு; பாதுகாப்பு பணியில் 8000 போலீசார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை பெருநகர காவல் ஆணையார் அருண் உத்தரவின்பேரில், பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தேவாலயங்களுக்கு (Churches) செல்வதால், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பாதுகாப்புக்காவும், கூட்ட நெரிசல் ஏற்படாத வண்ணமும், நேற்று இரவு முதல் இன்று வரை, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என 8,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறை பணிக்கு உதவியாக, ஊர்க்காவல் படையினரும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நேற்று இரவு முதல் பொதுமக்கள் தேவாலயங்களுக்கு (Churches) சென்று சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்வதால், நேற்று இரவு முதல் இன்று வரை சென்னையிலுள்ள சுமார் 350 தேவாலயங்களுக்கு சுழற்சி முறையில் காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் கண்காணிக்கவும், விரிவான பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் : சென்னையில் உள்ள தேவாலயங்களில் தீவிர கண்காணிப்பு; பாதுகாப்பு பணியில் 8000 போலீசார்!

மேலும் மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயம், பெசன்ட்நகர் வேளாங்கண்ணி தேவாலயம், பாரிமுனை அந்தோணியர் தேவாலயம், அண்ணாசாலை புனித ஜார்ஜ் (கத்தீட்ரல்), தேவாலயம், சைதாப்பேட்டை சின்னமலை தேவாலயம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவு கூடும் தேவாலயங்களுக்கு கூடுதலாக சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் ஆளிநர்கள் நியமிக்கப்பட்டு, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீர்படுத்தும் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் பொதுமக்கள் அதிகளவு கூடும் தேவாலயங்களின் அருகில் காவல் குழுவினர் மூலம் ஒலி பெருக்கியில் (Public Address system) பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும் கூட்ட நெரிசல் ஏற்படாத வண்ணமும் அறிவுறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, அனைத்து மகளிர் காவல் நிலையம், சிறப்பு பிரிவுகள் மற்றும் சுற்றுக்காவல் வாகன காவல் குழுவினர் தொடர்ந்து ரோந்து சுற்றி வரவும், கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற நபர்கள் பிக்பாக்கெட், திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடாதவாறு கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர சிசிடிவி கேமராக்கள், டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் சாதாரண உடையில் கண்காணித்து, திருட்டு, ஈவ்டீசிங் உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, ஒளிரும் விளக்குகள் மூலம் சிறப்பு வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளவும், சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடாதவாறு கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் : சென்னையில் உள்ள தேவாலயங்களில் தீவிர கண்காணிப்பு; பாதுகாப்பு பணியில் 8000 போலீசார்!

மெரினா, சாந்தோம், பெசன்ட்நகர், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்லும் பொதுமக்களை கடலில் இறங்காத வண்ணம் தடுக்கவும், அறிவுரைகள் வழங்கவும், All Terrain Vehicle (ATV) மூலம் கண்காணித்து, பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மூலம் சீரான போக்குவரத்து மற்றும் தேவாலயங்களின் அருகில் வாகன நிறுத்துமிடங்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய சந்திப்புகளில் சிறப்பு வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளவும், பைக் ரேஸ், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது, மதுபோதையில் வாகனங்களை ஓட்டுவது மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், முக்கிய சந்திப்புகளில் பொருத்தப்பட்டுள்ள ANPR மற்றும் CCTV கேமராக்கள் மூலம் விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் பதிவு எண்களை படம் பிடித்து தகுந்த ஆதாரத்துடன் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் அனுப்பவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை பெருநகர காவல் துறை சார்பில் சென்னையில் மக்கள் அதிக அளவில் கொடுக்கக்கூடிய இடங்களில் நேற்று இரவு முதலே தொடர்ந்து இரவு வாகன சோதனை பணியில் தீவிரமாக போலீசார் ஈடுபட்டு வந்தனர். மேலும் அதிவேகமாக வாகனத்தை இயக்கக் கூடியவர்களையும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தக் கூடிய வகையில் வாகனத்தை இயக்க கூடிய நபர்களை வாகனத்தின் பதிவு எண்கள் கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சென்னை காவல்துறை சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories