தமிழ்நாடு

கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம்!

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம் தெரிவித்துள்ளார்.

கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 123-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பெருந்தலைவர் காமராசருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ”தமிழ்நாட்டின் கல்வி, தொழில், வேளாண் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்!

மாற்று இயக்கத்தில் இருந்தாலும் தந்தை பெரியாரால் பச்சைத் தமிழர் எனப் பாராட்டப்பட்டு, அவரது எண்ணங்களைச் செயல்படுத்தியவர் காமராசர்.

பேரறிஞர் அண்ணாவால் பெரிதும் மதிக்கப்பட்டவர்.

நெருக்கடி நிலையை அறிவித்தபோது அதை எதிர்த்து முத்தமிழறிஞர் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்.

உடல்நிலை சரியில்லாதபோதும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்திய பெருந்தகையாளர்.

காமராசர் அவர்களின் பிறந்தநாளை் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.

அவரது வழியிலான நமது DravidianModel அரசிலும்,

*காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்,

*பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்த அவருக்குத் திருவுருவச் சிலை,

*திருச்சியில் உலகத்தரத்தில் தயாராகி வரும் மாபெரும் நூலகத்துக்குக் காமராசர் அவர்களின் பெயர்

எனப் பெருந்தலைவரின் புகழ்போற்றும் அரசினை நடத்தினோம்!

தலைமுறைகள் தழைக்கக் கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் தமிழ்நாடுள்ள மட்டும் நிலைத்திருக்கும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories