தமிழ்நாடு

Amazon, Flipkart, Meesho... இ-வர்த்தக தளங்களில் மகளிர் சுய உதவி குழு பொருட்கள் விற்பனை | TN Govt அசத்தல்!

மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் இ-வர்த்தகத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Amazon, Flipkart, Meesho... இ-வர்த்தக தளங்களில் மகளிர் சுய உதவி குழு பொருட்கள் விற்பனை | TN Govt அசத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

Amazon, Flipkart, Meesho, India Mart, Gio Mart, Boom மற்றும் GeM போன்ற இ-வர்த்தக முன்னணி நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு :

மகளிர் பொருளாதார சுய சார்பு பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்திற்காக ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தினார். கிராமப்புறங்களில் செயல்படும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை நகர்ப்புறப் பகுதிகளில் விற்பனை செய்திடும் வகையில் மாவட்டத் தலைநகரங்களில் வளாகங்கள் அமைத்து, அவற்றுக்கு 'பூமாலை வணிக வளாகங்கள்' என்று பெயர் சூட்டி, அவ்வளாகங்களில் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்திடச் செய்து, சுய உதவிக் குழுக்களின் பொருளாதர வளர்ச்சிக்கு வித்திட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

Amazon, Flipkart, Meesho... இ-வர்த்தக தளங்களில் மகளிர் சுய உதவி குழு பொருட்கள் விற்பனை | TN Govt அசத்தல்!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் நல்லாட்சி புரிந்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வண்ணம், மண்டல அளவிலான சாராஸ் கண்காட்சிகள், வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலான விற்பனைக் கண்காட்சிகள், கல்லூரிச் சந்தைகள் போன்றவை நடத்திட ஆணையிட்டு, அக்கண்காட்சிகளை துவக்கி வைத்தும், கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டும் சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கமளித்து, அவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வருகிறார்.

Amazon, Flipkart, Meesho... இ-வர்த்தக தளங்களில் மகளிர் சுய உதவி குழு பொருட்கள் விற்பனை | TN Govt அசத்தல்!

திராவிட மாடல் ஆட்சிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் தலைமையில் சாதனைகள் பல படைத்து வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பல்வேறு சமுதாய அமைப்புகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்திட பல்வேறு புதிய முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

Amazon, Flipkart, Meesho... இ-வர்த்தக தளங்களில் மகளிர் சுய உதவி குழு பொருட்கள் விற்பனை | TN Govt அசத்தல்!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு மிகப் பெரிய அளவிலான சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்திடும் வகையில், மதி அனுபவ அங்காடி (MaThi Experience Store), சிறுதானிய உணவகங்கள் (Millet Cafe), மதி சந்தை விற்பனை இணைய தளம், இயற்கை அங்காடி, மதி நடமாடும் விற்பனை வாகனம் (MaThi Express), வாங்குபவர் விற்பனையாளர் சந்திப்பு, அடுக்குமாடி விற்பனை சந்தை போன்ற முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக இணைய வழி விற்பனையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக, தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களை நான்கு மண்டலங்களாகப் பிரித்து, சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்ட தலைநகரங்களில் மண்டல அளவிலான இ-வர்த்தக சேவை முகாம் நடத்தப்பட்டது.

Amazon, Flipkart, Meesho... இ-வர்த்தக தளங்களில் மகளிர் சுய உதவி குழு பொருட்கள் விற்பனை | TN Govt அசத்தல்!

இம்முகாமில் Amazon, Flipkart, Meesho, India Mart, Gio Mart, Boom மற்றும் GeM போன்ற இ-வர்த்தக முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை பதிவேற்றம் செய்ய உதவி புரிந்தனர். இம்முகாமின் மூலமாக சுமார் 2,671 பொருட்கள் வரவழைக்கப்பட்டு அதில் 2,296 பொருட்கள் பல்வேறு இ- வர்த்தக தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இ-வர்த்தக தளங்களின் வாயிலாக இதுவரை ரூ.24.48 இலட்சம் மதிப்பிலான சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்விற்பனையை அதிகரிக்க மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் மாவட்ட அலுவலர்களுக்கு இ-வர்த்தக நிறுவனங்கள் மூலம் தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழியில், சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் சீரிய நடவடிக்கைகளின் பலனாக, சுய உதவிக் குழுக்கள் இன்று பொருளாதார வளர்ச்சி பெற்று, வளமான வாழ்வாதாரத்தைப் பெற்று வருகின்றனர் என்றால் அது மிகையில்லை.

banner

Related Stories

Related Stories