தமிழ்நாடு

விக்கிரவாண்டி தொகுதிக்கு 3 ஆண்டில் செய்ததும், இனி செய்யப்போவதும் : பட்டியலிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

விக்கிரவாண்டி தொகுதிக்கு 3 ஆண்டில் செய்ததும், இனி செய்யப்போவதும் : பட்டியலிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா (எ) சிவசண்முகம் அவர்களை ஆதரித்து திருவாமாத்தூர் பகுதியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள்

கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து கூடியிருந்த மக்களிடம் பேசிய அவர், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை நாடாளுமன்றத் தேர்தலில் 40 க்கு 40 வெற்றி பெற வைத்த உங்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு பணியும் பார்த்து பார்த்து செய்து வருகிறார் நம் முதலமைச்சர். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக பெட்ரோல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்தார் ஆவின் பால் விலையை குறைத்தார். அதே போல் விடியல் பயணத்தை பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய கையெழுத்திட்டார். இந்த மூணு வருடத்தில் 500 கோடி விடியல் பயணங்கள் தாய்மார்கள் மேற்கொண்டுள்ளனர் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 8 கோடி முறை இந்த வீடியல் பயணத்தில் பயணம் செய்து உள்ளீர்கள். புதுமைப்பெண் திட்டம் மூலமாக 2 லட்சத்து 72 ஆயிரம் மாணவிகள் மாத மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று பயன் பெற்று வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் பத்தாயிரம் மாணவிகள் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகின்றனர். அதேபோல் காலை உணவு திட்டம் மூலமாக 31,000 அரசு பள்ளிகளில் 17 லட்சம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். இந்த விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 66,000 மாணவர்கள் தினமும் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். மகளிர் உரிமைத் தொகை திட்டம் இதுவரை ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் பயன்ப பெற்று வருகின்றனர். விழுப்புரத்தில் மாவட்டத்தில் மட்டும் 60 ஆயிரம் பெண்கள் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குறுதிகளை பட்டியலிட்டார்.

  • 3 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் கெடார் ஊராட்சியில் நடைபெற்று வரும் மாதிரி பள்ளிகள் மற்றும் மாணவர்கள் குடியிருப்பு கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

  • விக்கிரவாண்டி ஊராட்சியில் 18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.

  • விக்கிரவாண்டி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

  • முண்டியம்பாக்கம் முதல் கோசபாளையம் வரை ஒரத்தூர் முதல் முண்டியம்பாக்கம் வரை உயர் மட்ட பாலப்பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

  • அதனுர் வாய்க்காலை தூர்வாரி முடிக்கப்பட்டு நீர் வழித்தடம் விரைவில் சரி செய்யப்படும்.

  • மூன்று கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய கானை வட்டார வளர்ச்சி அலுவலகப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

  • முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரூபாய் 62 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயரமட்ட மேம்பாலங்கள் பணி விரைவில் முடிக்கப்படும்.

  • அதேபோல் சாத்தனூர் அணை உபரிநீர் நந்தன் கால்வாயில் தேக்கி வைக்கப்பட்டு விக்கிரவாண்டி தொகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் பனைமலை பேட்டை ஏரியில் சேர்க்கின்ற திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்க உள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதிக்கு 3 ஆண்டில் செய்ததும், இனி செய்யப்போவதும் : பட்டியலிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

அதன் பின்னர் திராவிட மாடல் அரசின் மூன்றாண்டுகளில் செய்துள்ள சாதனைகளையும் பட்டியலிட்டர்.

நந்தன் கால்வாய் திட்டப் பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அன்னியூர் ஊராட்சியில் வருவாய் ஒன்றரை கோடியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு புதிய காத்திருப்போர் கூட மற்றும் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. என்னாயிரம் ஊராட்சியில் புதிய கால்நடை மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது. என்னாயிரம் ஊராட்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய இருளர் குடியிருப்பு திறந்து வைக்கப்பட்டுள்ளது. என்னாயிரம் ஊராட்சியில் வேளாண்மை தானியக்கிடங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாம்பழப்பட்டு முதல் மல்லிகை பட்டு வரை ஆகரம் சித்தாம்பூர் முதல் காடை குப்பம் வரை உள்ளிட்ட பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

வீடூர் அணையில் இருந்து குழாய் மூலமாக விக்கிரவாண்டி பேரூராட்சியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி பேரூராட்சியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி பேரூராட்சியில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய வடிகால் வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி மக்கள் பயன்பெறும் வகையில் புதிய உழவர் சந்தை திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் நீண்ட நாள் கோரிக்கையான நல்லா பாளையம் ஊராட்சியில் மூங்கில் பட்டு வரை 36 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி பேரூராட்சியில் புதிய மின் மயானம் அமைக்கப்பட்டுள்ளது.

இது எல்லாம் நமது கழக ஆட்சி அமைந்து 3 ஆண்டுகளில் சிலவற்றை தான் கூறியுள்ளேன் எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories