தமிழ்நாடு

பள்ளத்தில் கவிழ்ந்த கார் : இரவில் கணவன், மனைவிக்கு நேர்ந்த சோகம்!

நெல்லை அருகே சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளத்தில் கவிழ்ந்த கார் : இரவில் கணவன், மனைவிக்கு நேர்ந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி சுமித்ரா. இவர்கள் இருவரும் ராஜபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று காரில் திருநெல்வேலிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இவர்களது கார் நெடுங்குளம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த பள்ளத்தில் நீர் இருந்ததால் காரில் இருந்து கணவன், மனைவி இருவரும் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories