தமிழ்நாடு

”ரெட் கேட்டகிரியில் இருக்கும் அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு” : அமைச்சர் மெய்யநாதன் அதிரடி!

ரெட் கேட்டகிரியில் இருக்கும் அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

”ரெட் கேட்டகிரியில் இருக்கும் அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு” : அமைச்சர் மெய்யநாதன் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை எண்ணூர் பகுதியில் கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் கம்பெனியிலிருந்து அமோனியா எரிவாயு கசிவு ஏற்பட்டு அப்பகுதியில் வசிக்கக்கூடிய பெரிய குப்பம் சின்ன குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு கண் எரிச்சல் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனை அறிந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை, தீயணைப்பு துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், விரைந்து நடவடிக்கை எடுத்து உடனடியாக குழாயை சரி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்கள் அனைவரையும் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் கோரமண்டல் நிறுவனத்தை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து தொழிற்சாலைகளிலும் வல்லுநர் குழு அமைத்து பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

”ரெட் கேட்டகிரியில் இருக்கும் அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு” : அமைச்சர் மெய்யநாதன் அதிரடி!

இது குறித்து கூறிய அமைச்சர் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்," அமோனியா கசிவு ஏற்பட்ட நிலையில் 15 நிமிடத்தில் ஆலை நிர்வாகம் அதனை சரி செய்துள்ளது. இந்த வாயு கசிவால் 18 பேர் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனடியாக அப்பகுதிக்கு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சென்று, பரிசோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியில் பூஜ்யம் சதவீதம் அமோனியா இல்லை என்று கண்டறியப்பட்டது.

எனவே விபத்து ஏற்பட்ட போதிலும் அது உடனடியாக சரி செய்யப்பட்டது. அந்த தனியார் தொழிற்சாலை ரெட் கேட்டகிரியில் உள்ளது. இதேபோல ரெட் கேட்டகிரியில் இருக்கும் அனைத்து தொழிற்சாலைகளும், மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும். அதே சமயம் இதுபோன்ற விபத்துகள் ஏற்படும் போது, அதனை தடுக்க நவீன தொழில்நுட்ப அம்சங்கள் உடனடியாக பயன்படுத்தும் நிலையில் உள்ளதா என்பது குறித்து ஒரு குழு அமைத்து வல்லுனர்கள் உதவியுடன் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

மேலும் அந்த தனியார் கம்பெனி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.சல்ப்யூரிக் ஆசிட் பிளாண்ட்மட்டும் உடனடியாக மூட முடியாது என்பதால் படிப்படியாக மூடும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. எதிர் காலத்தில் இது போன்று விபத்துகள் நடைபெறாமல் இருக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை விரைவில் அறிவிப்போம். அங்கு மட்டும் அல்லாமல், நிரந்தர தீர்வை எட்டும் வகையில் இந்த ஆய்வு தமிழ்நாடு முழுவதும் நடைபெறும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories