தமிழ்நாடு

சூடு பிடித்த சர்ச்சை : குஷ்பு வீட்டின் முன் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்.. வழக்கு தொடரவும் முடிவு! - காரணம் ?

‘சேரி’ விவகாரத்தில் பாஜக பிரமுகர் குஷ்பூ வீட்டின் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூடு பிடித்த சர்ச்சை : குஷ்பு வீட்டின் முன் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்.. வழக்கு தொடரவும் முடிவு! - காரணம் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர் சந்திப்பின்போது நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியிருந்தார். இவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திரிஷா உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகள் மன்சூர் அலிகான் கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தோடு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அந்த வகையில், நடிகையும் பா.ஜ.க தலைமையின் ஆதரவால் மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கும் குஷ்பூ, தனது சமூகவலைதளத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராகக் கருத்து பதிவிட்டிருந்தார். இவரின் இந்த கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டபோது கருத்து தெரிவிக்காமல் தற்போது நடிகை என்பதால் திரிஷாவுக்கு மட்டும் கருத்து தெரிவிப்பதா? என்று பலரும் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்து வந்தனர்.

சூடு பிடித்த சர்ச்சை : குஷ்பு வீட்டின் முன் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்.. வழக்கு தொடரவும் முடிவு! - காரணம் ?

இதனால் மிகுந்த ஆவேசமடைந்த குஷ்பூ, மீண்டும் தனது சமூக வலைதள பக்கத்தில், "உங்களைப் போன்று சேரி மொழியில் என்னால் பேச முடியாது" என காட்டமாக பதிவிட்டிருந்தார். இதையடுத்து சேரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு நடிகை குஷ்புவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் 'சேரி' என்றால் பிரஞ்சு மொழியில் 'அன்பு' என்று புதிய விளக்கம் ஒன்றையும் அளித்திருந்தார். எனினும் அவரது உருட்டுக்கு மயங்காத மக்கள், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அவர் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். மேலும் செம்மஞ்சேரி, வேளச்சேரி என்பது போல் 'சேரி' என்று கூறியுள்ளதாகவும், தான் யார் மனதையும் புண்படுத்தவில்லை; எனவே தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்றும், பதிவை நீக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு மேலும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

இதனிடையே விசிக தரப்பில் குஷ்பூ மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், குஷ்பூ மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியதை தொடர்ந்து, காங்கிரஸ் எஸ்சி., எஸ்டி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் பட்டியலின, பழங்குடியின மக்களை அவமதிக்கும் வகையில் பேசிய குஷ்பூவின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

சூடு பிடித்த சர்ச்சை : குஷ்பு வீட்டின் முன் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்.. வழக்கு தொடரவும் முடிவு! - காரணம் ?

இதைத்தொடர்ந்து நேற்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த நிலையில், மழை காரணமாக இன்று ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்று காங்கிரஸ் கட்சியினர், குஷ்பூ வீட்டை முற்றுகையிட முயன்றனர். காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் குஷ்பூவின் உருவபொம்மையை எரித்து, தங்கள் எதிர்ப்பை காட்டினர். மேலும் குஷ்பூ இந்த சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் மன்னிப்பு கோரவில்லை என்றால், அவர் மீது வழக்கு தொடர்போவதாகவும் ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 100 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

banner

Related Stories

Related Stories