தமிழ்நாடு

‘சேரி’ விவகாரம் : “தேடி பிடித்து காரணங்களை கூறும் குஷ்பூ” - காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் தாக்கு !

குஷ்பூ மனசாட்சி உள்ள நபராக இருந்தால், தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருப்பார் என ‘சேரி’ விவகாரத்தில் குஷ்புவுக்கு காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘சேரி’ விவகாரம் : “தேடி பிடித்து காரணங்களை கூறும் குஷ்பூ” - காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் தாக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் நடிகை திரிஷா குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகை திரிஷா சமூகவலைதளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தொடர்ந்து நடிகர்கள், நடிகைகள் பலரும் நடிகர் மன்சூர் அலிகான், கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தோடு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அந்த வகையில், நடிகையும் பா.ஜ.க தலைமையின் ஆதரவால் மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கும் குஷ்பூ, தனது சமூகவலைதளத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராகக் கருத்து பதிவிட்டிருந்தார். இவரின் இந்த கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டபோது கருத்து தெரிவிக்காமல் தற்போது நடிகை என்பதால் திரிஷாவுக்கு மட்டும் கருத்து தெரிவிப்பதா? என்று பலரும் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்து வந்தனர்.

‘சேரி’ விவகாரம் : “தேடி பிடித்து காரணங்களை கூறும் குஷ்பூ” - காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் தாக்கு !

இதனால் மிகுந்த ஆவேசமடைந்த குஷ்பூ, மீண்டும் தனது சமூக வலைதள பக்கத்தில், "உங்களைப் போன்று சேரி மொழியில் என்னால் பேச முடியாது" என காட்டமாக பதிலளித்திருந்தார். இதையடுத்து சேரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு நடிகை குஷ்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் முன்னாள் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் 'சேரி' என்றால் 'அன்பு' என்று புதிய விளக்கம் ஒன்றையும் அளித்தார். எனினும் அவரது உருட்டுக்கு மயங்காத மக்கள், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ, மன்னிப்பு கேட்க முடியாது என்று பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார். மேலும் செம்மஞ்சேரி, வேளச்சேரி என்பது போல் 'சேரி' என்று கூறியதாகவும் வேறொரு புதிய விளக்கமும் அளித்தார். இதனால் அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

‘சேரி’ விவகாரம் : “தேடி பிடித்து காரணங்களை கூறும் குஷ்பூ” - காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் தாக்கு !

அந்த வகையில் காங்கிரஸ் எஸ்.சி, எஸ்.டி., பிரிவு மாநிலத்தலைவர் ரஞ்சன் குமார், தனது கண்டனத்தை அறிக்கை வாயிலாக தெரிவித்திருக்கிறார். அவரது கண்டன அறிக்கை பின்வருமாறு : “சிறந்த நடிகை என்பதை குஷ்பூ தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார். பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் வகையில் சேரி மொழி என்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். தமிழ்நாடு முழுவதும் அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்ததையடுத்து, ஒரு நாள் முழுவதும் தேடிப்பிடித்து பிரெஞ்சு மொழியில் சேரி என்றால் அன்பு என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

குஷ்பூ மனசாட்சி உள்ள நபராக இருந்தால், தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருப்பார். இந்தப் பிரச்சினையைத் தொடங்கிய நடிகர் மன்சூரலிகானே மன்னிப்பு கேட்டு பிரச்சினையை முடித்து வைத்துவிட்டார். ஆனால், தொடர்ந்து சேரி என்ற வார்த்தை அர்த்தங்களைத் தேடும் வேலையில் குஷ்பூ ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். எதிர்ப்பு தாங்காமல் சென்னையை விட்டு ஓடிவிட்டு மீண்டும் திரும்பிய குஷ்பூ, சேரிக்கு புது அர்த்தங்களை சொல்லியிருக்கிறார். வேளச்சேரி, செம்மஞ்சேரி என்றெல்லாம் பெயர் இருப்பதாக கூறி மீண்டும் சப்பைக்கட்டு கட்டும் வேலையைச் செய்திருக்கிறார்.

சேரி என்று அவர் பயன்படுத்திய இடம் திட்டுவதற்காகத்தான் என்பது அந்தப் பதிவைப் படித்த யாருக்குமே எளிதில் புரியும். இப்படியிருக்க தேடிப்பிடித்து அவர் காரணங்களை கூறும்போதே அவர் பக்கம் தவறு இருப்பதும், அதை மறைக்கப் போராடுவதும் தெரிகிறது. அடித்தட்டு மக்கள் என்றைக்குமே தமிழ்நாட்டில் எள்ளி நகையாடப்பட்டதில்லை. ஆனால், இருக்கும் இடமோ என்னவோ அந்த பழக்க தோஷத்தில் குஷ்பூ சேரி மொழி என்று பட்டியலின, பழங்குடியின மக்களை அவமதித்திருக்கிறார்.

‘சேரி’ விவகாரம் : “தேடி பிடித்து காரணங்களை கூறும் குஷ்பூ” - காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் தாக்கு !

ஆண்டாண்டு காலம் அடிமைப்பட்டு கிடந்த நாம் இன்றைக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறியுள்ளோம். இதற்காக காங்கிரஸ் கட்சிக்கு பட்டியலின, பழங்குடியின மக்கள் இன்றைக்கும் ஆதரவாக இருக்கிறார்கள். இதனை உணர்ந்து குஷ்பூவின் திமிர்த்தனமான சேரி மொழி என்ற கருத்துக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். இன்றைக்கு தலைப்பாகை கட்டிக் கொண்டிருக்கிறோம். குஷ்பூ கக்கிய விஷத்தை கடந்து போனால் மீண்டும் துண்டை இடுப்பில் கட்ட வேண்டிய கொடுமை ஏற்படும். அதோடு வட மாநிலங்களில் பட்டியலின, பழங்குடியினர் மீது நடத்தப்படும் வன்முறை போல் தமிழ்நாட்டிலும் எளிதாக நடத்தலாம் என்ற எண்ணம் ரத்தவெறி பிடித்த கும்பலுக்கு ஏற்படும் என்பதையும் பட்டியலின, பழங்குடியின மக்கள் உணர வேண்டும்.

எனவே, பெரும் தவறை செய்துவிட்டு மன்னிப்பு கேட்க மறுக்கும் குஷ்பூவை கண்டித்து அவர் வீட்டின் முன்பு திங்கட்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி.,எஸ்டி., பிரிவின் சார்பில் எனது தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் உணர்வுள்ள அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அன்புடன் வேண்டுகின்றேன். அதேபோல், பிற கட்சிகளில் உள்ள எஸ்சி., எஸ்டி., பிரிவினரும் பாசிச பாஜகவுக்கு எதிரான சக்திகளும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories