தமிழ்நாடு

மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் குறைவு: குறு சிறு தொழில் நிறுவனங்களின் மின் கட்டணம்- அமைச்சர் விளக்கம்!

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மின் கட்டணம் தமிழ்நாட்டில் குறைவாகத்தான் உள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் விளக்கம் அளித்துள்ளார்.

மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் குறைவு: குறு சிறு தொழில் நிறுவனங்களின் மின் கட்டணம்- அமைச்சர் விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மின் கட்டண மாற்றம் குறித்த அமைச்சர் தா.மோ. அன்பரசன் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை வருமாறு:-

மின் கட்டணத்தைப் பொறுத்தவரையில் மின் வாரியத்தில் ஏற்படும் செலவிற்கேற்ப, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அதனை உயர்த்துவது வழக்கமாக உள்ளது. உதாரணமாக 2011-2016 ஆ.தி.மு.க ஆட்சி காலத்தில் மின் கட்டணம் 2012-ஆம் ஆண்டில் 37 சதவீதமும் 2014-ஆம் ஆண்டில், 16.33 சதவீதமும் உயர்த்தப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மட்டும் 53 சதவீதம் மின் கட்டணம் கூடுதலாக உயர்த்தப்பட்டது. கடந்த ஆட்சியின் மோசமான நிர்வாகத்தால், மின் வாரியம் பெரும் நஷ்மடைந்து, பெரும் கடன் சுமைக்கு உள்ளானது. இது மட்டுமின்றி, குறிப்பிட்டுள்ள கால அளவிற்குள் தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால் தமிழ்நாட்டிற்கு நிதியுதவியோ, மத்திய நிறுவனங்களிடமிருந்து கடன் உதவியோ தரப்படாது எனஒன்றிய அரசு கடும் விதிமுறைகளை விதித்தது.

இந்த சூழ்நிலையில், வேறு வழியில்லாத காரணத்தால்2022-23 முதல் 2026-27 வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு Multi Year டாரிப் மின் கட்டண மனுவை,கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNERC) முன்பு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO), சமர்ப்பித்தது.

இதனால் ஏற்பட்ட மின்கட்டண மாற்றம் குறித்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகள் தெரிவித்த கோரிக்கைகளைப் பரிசீலித்து, அவர்களது நலனைப் பாதுகாக்கும் வகையில் கட்டணத்தை மாற்றி அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். இதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு ஆண்டு ஒன்றிக்கு ரூ.2,000 கோடி வருவாய் குறைந்தாலும், தொழில்முனைவோரின் நலனைக் கருத்தில் கொண்டு, தொழிற்சாலைகளுக்கு சதவீதமாக நிர்ணயிக்கப்பட இருந்த நிலைக்கட்டணம் (Fixed Charges) மாதம் ஒன்றுக்கு 50 கிலோவாட் வரை ரூ.100-லிருந்து ரூ.75 எனவும், 50 கிலோவாட்டுக்கு மேல் 100 கிலோவாட் வரை ரூ.325-லிருந்து ரூ.150 எனவும், 100 கிலோவாட் முதல் 112 கிலோவாட் வரை ரூ.600- லிருந்து ரூ.150 எனவும், 112 கிலோவாட்டுக்கு மேல் ரூ.600 லிருந்து ரூ.550 எனவும், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் (TNERC) ஒப்புதல் பெற்று மாற்றியமைக்கப்பட்டது.

மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் குறைவு: குறு சிறு தொழில் நிறுவனங்களின் மின் கட்டணம்- அமைச்சர் விளக்கம்!

இதன் பின்னர், தொழில் மேம்பாட்டிற்கான மேலும் ஒரு நடவடிக்கையாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவு நுகர்வோர்களின் கோரிக்கைகளை ஏற்று, தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கான (LT III-B) உச்சநேர (Peak Hour) நுகர்விற்கான மின்கட்டணத்தை 25 சதவீதத்திலிருந்து 15 குறைத்துஆணையிடப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த கட்டணங்களுக்காக ஆண்டிற்கு ரூ.145 கோடியை தமிழ்நாடு அரசு TANGEDCO-விற்கு கூடுதல் மானியமாக வழங்குகிறது. இதன் மூலம் சுமார் 3 லட்சத்து 37 ஆயிரம் MSME நிறுவனங்கள் பயன் பெற்று வருகின்றன. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் Multi Year டாரிப் ஆணையின்படி, 2023 ஜூலை மாதத்தைப் பொறுத்த வரையில், 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல் ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின் படி கணக்கிட்டால், 4.7 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இந்த நடைமுறையை ஆய்வு செய்த தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தும் போது பொதுமக்களும், தொழில்துறையினரும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

இதனை கருத்தில் கொண்டு, கட்டண உயர்வு விகிதம் மறு ஆய்வு செய்யப்பட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணிற்கு பதிலாக 2022 ஆகஸ்ட் மாதத்தின் விலை குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, கட்டண உயர்வு 4.7 சதவிகிதத்திலிருந்து 2.18 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே பெறப்பட்ட இக்கோரிக்கைகள் தொடர்பாக 18.04.2023, 21.07.2023 மற்றும் 26.09.2023 ஆகிய நாட்களில் அமைச்சர் பெருமக்கள் முன்னிலையில் தொழில் நிறுவன சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளின்கருத்துக்கள் கேட்டறியப்பட்டு அக்கருத்துக்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மாமுதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, கீழ்க்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. பருவகால தேவைக்கு ஏற்ப , மாறும் தன்மையுள்ள மின்பளுவை கொண்ட தாழ்வழுத்த தொழிற்சாலைக ள் தங்களது நிலைக் கட்டணத்தை ( Fixed Charges) குறைத்துக் கொள்ளும் வகையில் அனுமதிக்கப்பட்ட மின்பளுவினை குறைத்துக் கொள்ளவும், தேவைப்படும் போது உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நான்கு முறை பயன்படுத்திக் கொள்ளலாம். இச்சலுகையை ஆண்டு ஒன்றுக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்தஉள்ள குறு நிறுவனங்களுக்கான வீதப்படிக்கு மாற்ற ஆணை இதற்காக தேவையில்லை.

மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் குறைவு: குறு சிறு தொழில் நிறுவனங்களின் மின் கட்டணம்- அமைச்சர் விளக்கம்!

12 கிலோ வாட்டுக்கு குறைவாக மின் கட்டணம் III -B வீதப்படியி ல் இருந்து III -A1 வெளியிடப்பட்டுள்ளது. மேலும், குறு மற்றும் சிறு தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண த்தை பிற தென்னிந்திய மாநிலங்க ளோடு ஒப்பிடும் போது ஒரு யூனிட் மின் கட்டணம் ஆந்திரா மாநிலத்தில் 8 ரூபாய் 47 பைசா வாகவும், கர்நாடகா மாநிலத்தில் 7 ரூபாய் 81 பைசா வாகவும், உள்ள நிலையில் தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் 7 ரூபாய் 50 பைசா வாக உள்ளது. அதே போன்று நிலைக்

கட்டணத்தை ஒப்பிடும் போது ஒரு கிலோவாட்டிற்கு ஆந்திரா மாநிலத்தில் ரூ.292 ஆகவும், கர்நாடகா மாநிலத்தில் ரூ .275 ஆகவும், கேரள மாநிலத்தில் ரூ.220 ஆகவும் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ரூ.150 ஆக உள்ளது. பிற மாநிலங்களில் மின் வரி (E.Tax) 10 முதல் 15 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 5 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மேலும், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் எரிபொருள் விலையை ஈடு செய்யும் முறையில் ஒவ்வொரு கால் ஆண்டிற்கும் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

எனவே பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் நமது மாநிலத்தில் மின்கட்டணம் மற்றும் நிலைக்கட்டணம் மிகவும் குறைவாகவே உள்ளது. இவ்வாறு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்ட நிலையில்,குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன சங்கங்கள் இதர கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தியதைக் கருத்தில் கொண்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அந்த கோரிக்கைகளை கனிவுடன் ப ரிசீலித்து, மேலும் கூடுதல் சலுகைகளாக தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கான LT III-B உச்ச நேர நுகர்விற்கான மின்கட்டணத்தை ஸ்மார்ட் மீட்டர் (Smart Meter) பொருத்தப்படும் வரை நடைமுறைப்படுத்துவதை தற்காலிகமாக ஒத்தி வைத்தும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சோலார் மேற்கூரை மின் உற்பத்தி நெட்வொர்க் கட்டணத்தினை50% குறைத்தும் ஆணையிட்டுள்ளார்கள்.

இதனால் ஆண்டுக்கு ரூ.50 கோடி அரசுக்கு செலவாகும். இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து MSME நிறுவனங்களின் நலனிற்காகவும், முன்னேற்றத்திற்காகவும், முதல்வர் அவர்கள் தனி கவனம் செலுத்தி, பல்வேறு புதிய திட்டங்க ளை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கான நிதி ஒதுக்கீட்டினை 2021-22 ஆம் நிதி ஆண்டில் ரூ.741.96 கோடி யாகவும், 2022-23-ஆம் நிதி ஆண்டில் ரூ.1025.10 கோடியாகவும், 2023-24-ஆம் நிதி ஆண்டில் ரூ.1502.11 கோடியாகவும், ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தி வழங்கி வருகிறார்.

MSME நிறுவனங்களின் நலனைப் பாதுகாப்பதில் இந்த அரசு முனைப்புடன் செயல்படுகிறது. எனவே, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகள் யாருடைய தூண்டுதலுக்கும் இடம் கொடுக்காமல், தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, தொழிலாளர்களின் நலனை எண்ணி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories