தமிழ்நாடு

தாய் வீட்டிற்குச் சென்றபோது நடந்த துயரம்.. சாலையில் கணவன் கண்முன்னே உயிரிழந்த மனைவி!

சென்னையில் சாலை விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய் வீட்டிற்குச் சென்றபோது நடந்த துயரம்.. சாலையில் கணவன் கண்முன்னே உயிரிழந்த மனைவி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை தரமணி பகுதியைச் சேர்ந்தவர் ரகு. இவர் தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஹேமலதா. இவர் கிண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று கணவர் ரகுவுடன் பெரம்பூர் பகுதியில் உள்ள தாயார் வீட்டுக்குச் செல்வதற்காக தரமணியில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஹேமலதா சென்றுள்ளார். இவர்களது வாகனம் அடையாறு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த சிமெண்ட் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர்.

தாய் வீட்டிற்குச் சென்றபோது நடந்த துயரம்.. சாலையில் கணவன் கண்முன்னே உயிரிழந்த மனைவி!

இதில் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ஹேமலதா உயிரிழந்துள்ளார். இந்த விபத்துபற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் ஆசாத் ஆலம் என்பவரை அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories