தமிழ்நாடு

தலையை நோக்கி வீசப்பட்ட அரிவாள்.. தொப்பியில் பட்டு தப்பித்த உயிர்: போலிஸ் நடத்திய என்கவுண்டர் -முழு விவரம்

போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் நடத்தப்பட்ட என்கவுண்டரில் 2 ரௌடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தலையை நோக்கி வீசப்பட்ட அரிவாள்.. தொப்பியில் பட்டு தப்பித்த உயிர்: போலிஸ் நடத்திய என்கவுண்டர் -முழு விவரம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே ஊரப்பாக்கத்தில் காரணை - புதுச்சேரி செல்லும் பிரதான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவல்துறையினர் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே கருப்பு நிற கார் ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது.

அதனை போலீசார் தடுக்க முயன்றபோது, அவர்கள் மீது ஏற்றுவது போல் வந்துள்ளது. இதில் போலீசார் விளக்கிக்கொள்ளவே, அந்த கார் போலீஸ் ஜீப் மோதி மோதி நின்றுள்ளது. இதையடுத்து காரில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் போலீசாரை ஆயுதங்களுடன் தாக்கினர். அப்போது உதவி ஆய்வாளர் மீது அந்த அரிவாள் வெட்டுபட்டது.

தலையை நோக்கி வீசப்பட்ட அரிவாள்.. தொப்பியில் பட்டு தப்பித்த உயிர்: போலிஸ் நடத்திய என்கவுண்டர் -முழு விவரம்

மேலும் அவரது தலையை நோக்கி மீண்டும் அரிவாளால் தாக்க முயன்றபோது, அந்த ஆய்வாளர் குனியவே, அவர் தொப்பியில் வெட்டு பட்டது. இதையடுத்து வேறு வழியின்றி போலீசார் 2 ரௌடிகளை சுட்டனர். தொடர்ந்து அங்கிருந்த மீது ரௌடிகள் தப்பித்து ஓடிவிட்டனர். இதையடுத்து துப்பாக்கி சூடுபட்டவர்களை மீட்ட போலீசார் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.

தலையை நோக்கி வீசப்பட்ட அரிவாள்.. தொப்பியில் பட்டு தப்பித்த உயிர்: போலிஸ் நடத்திய என்கவுண்டர் -முழு விவரம்

அங்கே அவர்களை சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இதுகுறித்து விசாரிக்கையில், உயிரிழந்த ரௌடிகளின் பெயர் சோட்டா வினோத் (35), ரமேஷ் (32) என்று தெரியவந்தது. மேலும் அதி வினோத் மீது 10 கொலை, 15 கொலை முயற்சி, 10 கூட்டுக்கொள்ளை என 50-க்கும் மேற்பட்ட வழக்குகளும், ரமேஷ் மீது 5 கொலை, 7 கொலை முயற்சி, 8 அடிதடி என 20-க்கும் மேற்பட்ட வழக்குகளும் உள்ளது தெரியவந்தது.

ரெளடிகளின் தாக்குதலில் வெட்டுப்பட்ட உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் தற்போது குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories