தமிழ்நாடு

திருமணம் நடந்த 10 நாளில்.. புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு: அதிர்ச்சியில் உறவினர்கள்!

திருவள்ளூர் அருகே திருமணம் நடந்து 10 நாளில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் நடந்த 10 நாளில்.. புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு: அதிர்ச்சியில் உறவினர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வி.ஜி.ஆர்.கண்டிகை காலனியைச் சேர்ந்தவர் முத்து. இவருக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த பி.எஸ்.சி படித்து முடித்த அனு என்ற பெண்ணுடன் கடந்த 29-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று இரவு கணவன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அனு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்தனர்.

திருமணம் நடந்த 10 நாளில்.. புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு: அதிர்ச்சியில் உறவினர்கள்!

பின்னர் இந்த தற்கொலை குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கணவன் தினமும் குடித்துவிட்டு சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அனு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட

மேலும் புதுமணப் பெண் தற்கொலை சம்பவம் தொடர்பாக திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருமணமான 10 நாட்களில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories