தமிழ்நாடு

2 சிறுமிகள் உட்பட 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் உட்பட 11 பேர் கைது: விசாரணையில் அதிர்ச்சி!

புளியந்தோப்பு பகுதியில் 2 சிறுமிகள் உட்பட 3 பேரை பாலியல் வன்கொடுமை செய்த 11 பேர் கொண்ட கும்பல் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

2 சிறுமிகள் உட்பட 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் உட்பட 11 பேர் கைது: விசாரணையில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் மற்றும் சுதா தம்பதியினர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர்களது உறவுக்கார பெண் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 18 வயது பெண். இவர் தனது 17 வயது தோழியை அழைத்துக் கொண்டு மேற்படி புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் உள்ள தனது சித்தி சுதா வீட்டிற்கு வந்துள்ளார்.

அங்கே தனது சித்தி மகளான மற்றொரு 17 வயது சிறுமியுடன் சேர்ந்து 3 பேரும் அடிக்கடி வெளியே சென்று வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 3 பேரும் வெளியே சென்றுள்ளனர். அப்போது கன்னிகாபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும், தாம்பரத்திலிருந்து வந்திருந்த மற்றொரு சிறுமியும் தங்களது வீட்டிற்கு 11 மணிக்கு வந்து விட்டனர். கன்னிகாபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுமியின் உறவுக்கார பெண் மட்டும் வரவில்லை. நள்ளிரவு 2 மணி அளவில் அந்த பெண் வீட்டிற்கு வந்தார்.

2 சிறுமிகள் உட்பட 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் உட்பட 11 பேர் கைது: விசாரணையில் அதிர்ச்சி!

அப்போது வீட்டில் இருந்த அவரது சித்தி சித்தப்பா இவ்வளவு நேரம் எங்கு சென்றிருந்தாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அந்த சிறுமி என்னை 5 பேர் கொண்ட கும்பல் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாகவும் இதனால் உடல் முழுவதும் வலி ஏற்பட்டுள்ளதாக கூறி அந்த பெண் அழுதுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் சித்தி சித்தப்பா இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து இரவு பணியில் இருந்த புளியந்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணிடம் என்ன நடந்தது என்று கூறி அவரை முதலில் ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனைக்கு

சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

2 சிறுமிகள் உட்பட 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் உட்பட 11 பேர் கைது: விசாரணையில் அதிர்ச்சி!

விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்தன. தாம்பரத்தை சேர்ந்த 18 வயது பெண் மற்றும் 17 வயது சிறுமி ஆகிய இருவரும் கனிகாபுரத்திற்கு தனது உறவினர் வீட்டிற்கு வந்து தங்கி உள்ளனர். தினமும் மூன்று பேரும் சேர்ந்து வெளியே சென்று ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு இரண்டு சிறுமிகள் மற்றும் 18 வயது இளம் பெண் மூன்று பேரும் வெளியே சென்றுள்ளனர். அப்பொழுது புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் 2 சிறுமி மற்றும் 18 வயது பெண் என 3 பேரையும் புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சேர்ந்த ஆண் நண்பர்கள் சேர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது கன்னிகாபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி மற்றும் தாம்பரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி மட்டும் வீட்டிற்கு வந்து விட்டனர். ஆனால் தாம்பரத்தைச் சேர்ந்த மற்றொரு 18 வயது பெண்ணை அங்கிருந்து 5 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பிறகு பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு வந்து தனக்கு நேர்ந்த கொடுமையை தனது சித்தி சித்தப்பாவிடம் கூறியது தெரியவந்துள்ளது.

2 சிறுமிகள் உட்பட 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் உட்பட 11 பேர் கைது: விசாரணையில் அதிர்ச்சி!

இதனை அடுத்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இன்று காலை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (22), தனுஷ் (19), சஞ்சய் (21), லாமிக் (18), மகேஸ்வரன் (18), தனுஷ் (எ) அன்னை தனுஷ் (19), முத்துராமன் (21), சஞ்சய் (எ) மொட்டையன் (18) மற்றும் 17 வயது சிறுவர்கள் மூன்று பேர் என 11 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும், கன்னிகாபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் சில ஆண் நண்பர்கள் தொடர்பு வைத்துக்கொண்டு அவரது வீட்டிற்கு வந்த சக தோழிகள் இரண்டு பேரையும் சேர்த்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட 11 பேரும் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அதில் எட்டு பேர் புழல் சிறையிலும் மீதி 3 பேர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

banner

Related Stories

Related Stories