தமிழ்நாடு

தீவிர சிகிச்சை பிரிவில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதி !

தீவிர சிகிச்சை பிரிவில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் வீட்டில் நேற்று தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடந்தது. தொடர்ந்து தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் அமைச்சரின் அறையில் சோதனை நடத்தினர் .

சுமார் 17 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்ற நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை உறவினர், குடும்பத்தினரை கூட சந்திக்க விடவில்லை. தொடர்ந்து அவருக்கு மன அழுத்தத்தை அதிகாரிகள் கொடுத்து வந்தனர். இந்த சூழலில் சோதனை நிறைவடைந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யப்போவதாகவும், தங்களுடன் நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு வருமாறும் அதிகாரிகள் அழைத்தனர்

தீவிர சிகிச்சை பிரிவில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதி !

முறையான அனுமதி, நோட்டீஸ் எதுவும் இல்லாமல் அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் கைது செய்யப்போவதாக அறிவித்திருந்த நிலையில், அவருக்கு மேலும் மன அழுத்தத்தையும் கொடுத்தது. இந்த நிலையில், அமைச்சர் செல்லும்போது திடீரென நெஞ்சுவலி ஏற்ப்பட்டது. இதனால் கதறி துடித்த அமைச்சரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதி !

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அமைச்சருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மன அழுத்தம், டென்சன் என அமலாக்கத்துறையினரின் நடவடிக்கை காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மயக்கம் ஏற்பட்டு, நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. மேலும் அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனரா அல்லது விசாரணைக்கு அழைத்து சென்றனரா என்பது குறித்தும் எதுவும் தெரியவரவில்லை.

எனினும் எதையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விதிமுறைகளை பின்பற்றி செய்யவில்லை. மேலும் அவரை யாரும் பார்ப்பதற்கு அனுமதி கூட வழங்கவில்லை. அமலாக்கத்துறையினரின் இந்த நடவடிக்கை காரணமாக அமைச்சரின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories