தமிழ்நாடு

12 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?.. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சொன்ன முக்கிய தகவல்!

மே 7ம் தேதி நீட் தேர்வுகள் நடைபெற உள்ளதால் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

12 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?.. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சொன்ன முக்கிய தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதி முடித்து விட்டு தங்களது முடிவுக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் மாணவர்கள் தங்களது உயர் கல்வி குறித்துப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் சில மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

12 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?.. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சொன்ன முக்கிய தகவல்!

இந்நிலையில் நீட் தேர்வு வரும் மே 7ம் தேதி நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 12ம் வகுப்புத் தேர்வு வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இது குறித்துக் கூறிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "மே 7ம் தேதி நீட் தேர்வுகள் நடைபெற உள்ளது. இதனால் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி குறித்து முதலமைச்சர் உடன் ஆலோசனை நடத்திய பின் அறிவிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories