தமிழ்நாடு

கிணற்றில் குளிக்கச் சென்ற நண்பர்கள்.. நீச்சல் தெரியாததால் நடந்த விபரீதம்: கதறி அழுத உறவினர்கள்!

தேனியில் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றில் குளிக்கச் சென்ற நண்பர்கள்..  நீச்சல் தெரியாததால் நடந்த விபரீதம்: கதறி அழுத உறவினர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பள்ளிச் சிறுவன் வசீகரன். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தங்கள் பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.

அப்போது முத்துக்குமார் மற்றும் பாண்டி செல்வன் இருவருக்கு மட்டும் நீச்சல் தெரியும் என்பதால் அவர்கள் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். மேலும் வசீகரன், பிரசன்னா ஆகியோருக்கு நீச்சல் தெரியாததால் இவர்கள் இருவரும் கிணற்றின் படிக்கட்டில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தனர்.

கிணற்றில் குளிக்கச் சென்ற நண்பர்கள்..  நீச்சல் தெரியாததால் நடந்த விபரீதம்: கதறி அழுத உறவினர்கள்!

அப்போது திடீரென வசீகரன் படிக்கட்டிலிருந்து தவறி கிணற்றில் விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த முத்துக்குமார் உடனே வசீகரனை மீட்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் வசீகரன் நீரில் மூழ்கியுள்ளார்.

இதுபற்றி காவல்துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு வசீகரனைச் சடலமாக மீட்டனர்.

கிணற்றில் குளிக்கச் சென்ற நண்பர்கள்..  நீச்சல் தெரியாததால் நடந்த விபரீதம்: கதறி அழுத உறவினர்கள்!

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் தவறி விழுந்து நண்பர்கள் முன்பு பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories