தமிழ்நாடு

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ள 19 புதிய அறிவிப்புகள்: அது என்ன?

ஊரகக் கடன்கள் மீதான மானியக் கோரிக்கையில் 19 புதிய அறிவிப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ள 19 புதிய அறிவிப்புகள்: அது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது.

இதையடுத்து நேற்றில் இருந்து மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் மீதான மானியக் கோரிக்கையில் 19 புதிய அறிவிப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ள 19 புதிய அறிவிப்புகள்: அது என்ன?

1. 45,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி ரூ.145 கோடி செலவில் வழங்கப்படும்.

2. 5000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 75 கோடி மதிப்பீட்டில் சமுதாய முதலீட்டுநிதி வழங்கப்படும்.

3. சுய உதவிக் குழுக்களால் நடத்தப்படும் 7500 நுண் மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் ரூ.50 கோடி செலவில் வலுப்படுத்தப்படும்.

4.1000 கிராம ஊராட்சிகளில் உள்ள மகளிர் புதிய தொழில் தொடங்குவதற்கும் ஏற்கனவே உள்ள தொழிலை மேம்படுத்துவதற்கும் நுண் தொழில் நிறுவனங்களுக்கான நிதி திட்டம் ரூ.50 கோடியில் செயல்படுத்தப்படும்.

5. ஊரகப் பகுதிகளில் 10000 சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ரூ.15 கோடி சுழல் நிதி வழங்கப்படும்.

6. அனைத்து மாவட்டங்களிலும் உள்ளூர் வல்லுநர்களை கொண்டு ஊரக இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க 1000 புதிய சமுதாய திறன் பள்ளிகள் ரூ.10 கோடியில் உருவாக்கப்படும்.

7. ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து சுய உதவிக் குழுக்களுக்கும் ரூ. 9 கோடியே 48 லட்சம் செலவில் புத்தாகப் பயிற்சி வழங்கப்படும்.

8. மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களின் மறுவாழ்விற்காக பொருளாதார கூட்டமைப்புகள் ரூ.7 கோடியே 34 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.

9. 100 முக்கிய சுற்றுலா தலங்களில் சுய உதவிக் குழுக்களின் பொருட்களை விற்பனை மற்றும் காட்சிப்படுத்த மதி அங்காடிகள் ரூ.5 கோடி செலவில் அமைக்கப்படும்.

10. ஒரு வட்டாரம் ஒரு உற்பத்தி பொருள் எனும் திட்டம் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டி, சந்தைப்படுத்த ஏதுவாக பொது சேவை மையம் ரூ.5 கோடியில் அமைக்கப்படும்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ள 19 புதிய அறிவிப்புகள்: அது என்ன?

11. சிறப்பு சுய உதவிக் குழு உறுப்பினர்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய 100 மதி எக்ஸ்பிரஸ் வாகனங்கள் ரூ.3 கோடி செலவில் வழங்கப்படும்.

12. சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் வாங்குவோர் விற்போர் சந்திப்புகள் ரூ. 2 கோடியே 5 ஆயிரம் செலவில் நடத்தப்படும்.

13. மகளிர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் 100 சான்றளிக்கப்பட்ட சிறுதானிய விதை உற்பத்தி அலகுகள் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படும்.

14. சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு 37 மாவட்ட பெருந்திட்ட வளாகங்களில் மகளிர் குழுக்கள் சிறுதானிய உணவகங்கள் நடத்திட ரூ.1 கோடியே 85 லட்சம் வழங்கப்படும்.

15. 37 மாவட்டங்களிலும் முன் மாதிரியாக வானவில் மையம் எனும் பாலின வள மையம் ரூ.1 கோடியே 36 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

16.அனைத்து மாவட்டங்களிலும் 100 இளைஞர் திறன் மற்றும் வேலை வாயப்பு திருவிழாக்கள் ரூ.1 கோடி செலவில் நடத்தப்படும்.

17. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட ஊரக பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட சுய உதவிக் குழு மகளிருக்கு சமையல் செய்முறை பயிற்சி ரூ.1 கோடி செலவில் வழங்கப்படும்.

18. ஊராட்சி மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்புகளின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் நிதியினை கண்காணித்திட ஒரு மின்னணு தளம் உருவாக்கப்படும்.

19. சமுதாய வளப் பயிற்றுநர்களின் திறனை மேம்படுத்துவதற்காக கற்றல் மேலாண்மை அமைப்பு எனும் மின்னணு தளம் உருவாக்கப்படும்.

banner

Related Stories

Related Stories