தமிழ்நாடு

“நான் விலகிச் செல்ல மாட்டேன்.. அதானி ஸ்பான்சர் செய்யும் விருது வேண்டாம்” : கவிஞர் சுகிர்தராணி அறிவிப்பு!

இந்தியன் எக்ஸ்பிரஸ் வழங்கும் விருதுக்காக நன்றி தெரிவித்துவிட்டு, 'தேவி' விருதை வாங்க மறுப்பதாக கவிஞர் சுகிர்தராணி தெரிவித்துள்ளார்.

“நான் விலகிச் செல்ல மாட்டேன்.. அதானி ஸ்பான்சர் செய்யும் விருது வேண்டாம்” : கவிஞர் சுகிர்தராணி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையைச் சேர்ந்தவர் கவிஞர் சுகிர்தராணி. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கவேரிப்பாக்கத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், `கைப்பிடித்து என் கவிதை கேள்’, `இரவு மிருகம்’, `அவளை மொழிபெயர்த்தல்’, `தீண்டப்படாத முத்தம்’, `காமத்திப்பூ’, `இப்படிக்கு ஏவாள்’ உள்ளிட்ட கவிதை தொகுப்பு நூல்களை எழுதியுள்ளார்.

மேலும் கவிதைகள் வழியே பல அரசியலை பேசும் கவிஞர் சுகிர்தராணி, தலித் விடுதலை மற்றும் பெண் விடுதலை இரண்டையும் மையமாக வைத்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் வழங்கவிருக்கும் விருதை வேண்டாம் என்று கவிஞர் சுகிர்தராணி மறுத்துள்ளார்.

“நான் விலகிச் செல்ல மாட்டேன்.. அதானி ஸ்பான்சர் செய்யும் விருது வேண்டாம்” : கவிஞர் சுகிர்தராணி அறிவிப்பு!

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் 'தேவி' விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான தேவி விருதுகள் கவிஞர் சுகிர்தராணி உள்ளிட்ட 12 பெண் ஆளுமைகளுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் வழங்கும் விருதுக்காக நன்றி தெரிவித்துவிட்டு, அந்த விருதை வாங்க மறுப்பதாக கவிஞர் சுகிர்தராணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கவிஞர் சுகிர்தராணி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “விருது மறுப்பு அறிவிப்பு

நண்பர்களுக்கு வணக்கம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 12 பெண் ஆளுமைகளைச் தேர்ந்தெடுத்து 'Devi Award ' வழங்குகிறது. இலக்கியம் மற்றும் தலித் இலக்கியத்தில் தொடர்ந்து இயங்கி வரும் என் சமூகப் பங்களிப்பிற்காக, 'Devi Award' எனக்கு வழங்கப்படுகிறது. அதற்காக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு என் நன்றி. விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி 8 ந்தேதி புதன்கிழமை சென்னை ITC Grand Chola Hotel ல் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

“நான் விலகிச் செல்ல மாட்டேன்.. அதானி ஸ்பான்சர் செய்யும் விருது வேண்டாம்” : கவிஞர் சுகிர்தராணி அறிவிப்பு!

இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்கு முதன்மை ஸ்பான்சர் அதானி என்பது நேற்றுதான் எனக்குத் தெரிய வந்தது. நான் பேசும் அரசியலுக்கும் கொண்ட கொள்கைக்கும் சிந்தனைக்கும் அதானி நிதி உதவி அளிக்கும் ஓர் அமைப்பிலிருந்தோ நிகழ்ச்சியிலிருந்தோ விருது பெறுவது எனக்கு சிறிதும் உவப்பில்லை. எனவே இந்த தேவி விருது பெறுவதை மறுக்கிறேன்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திற்கும் என் விருது மறுப்பை முறைப்படி இன்று மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்து விட்டேன். நான் எப்போதும் என் அரசியல் தெளிவு மற்றும் தெரிவிலிருந்து விலகிச் செல்ல மாட்டேன் என்பதை நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.” எனத் தெரிவித்துள்ளார். மேலும் பலரும் அவரது இந்த முடிவுக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories