தமிழ்நாடு

கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர்-புகழ்மாலைகள் குவியட்டும்: எழுத்தாளர் இமையத்திற்கு முதலமைச்சர் வாழ்த்து

குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் இமையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர்-புகழ்மாலைகள் குவியட்டும்: எழுத்தாளர் இமையத்திற்கு முதலமைச்சர் வாழ்த்து
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கன்னட இலக்கியத்தின் பெரும் கவிஞராகப் போற்றப்படுபவர் குப்பளி வெங்கடப்கௌடா புட்டப்பா. ஆனால் இவர் எழும் நூல்களில் குவெம்பு என்றே பெயர் இருக்கும். இதனால் அவரை குவெம்பு என்று சென்னால்தான் இலக்கிய உலகத்தில் பரிட்சையம். இவர் ஞானபீடம், பத்ம பூசன், சாகித்திய அகாதமி என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் கன்னட இலக்கியத்தில் மட்டுமல்லாது இந்திய இலக்கியம் வரை இவரது கவிதைகள் பிரபலம்.

கர்நாடக மாநிலம், இரேகொடிகை என்ற ஊரில் 1904ம் ஆண்டு பிறந்த இவர் 1994ம் ஆண்டு தனது 89ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இவரது பெயரில் இலக்கிய உலகத்தில் சமூகத்திற்கான படைப்புகளை எழுதி வரும் எழுத்தாளர்களுக்கு 2013ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தேர்வு செய்யப்படும் எழுத்தாளருக்கு ரூ. 5 லட்சம் மற்றும் வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர்-புகழ்மாலைகள் குவியட்டும்: எழுத்தாளர் இமையத்திற்கு முதலமைச்சர் வாழ்த்து

அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருதுக்கு எழுத்தாளர் இமையம் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.

எழுத்தாளர் இமையம் அவர்களின் இயற்பெயர் வெ.அண்ணாமலை. இவர் 1964ல் விருத்தாசலத்தில் பிறந்தவர். இவரது முதல் நூல், ‘கோவேறு கழுதைகள்’ எனும் நாவலாகும். தொடர்ந்து, ஆறுமுகம், செடல், எங் கதெ, செல்லாத பணம் உள்ளிட்ட நாவல்களை எழுதினார் இமையம்.

எழுத்தாளர் இமையம் எழுதி 2018ம் ஆண்டு க்ரியா பதிப்பகம் வெளியிட்ட ‘செல்லாத பணம்’ நாவலுக்காக கடந்த ஆண்டு சாகித்ய அகாடமி அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனது இலக்கிய எழுத்துகளுக்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ள இமையம் சமீபத்தில் தமிழ்நாடு அரசின் கனவு இல்லத் திட்டம் விருதுக்கும் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர் இமையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:_

"கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் - எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு 'குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்' விருது அறிவிக்கப்படிருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன். திராவிட இயக்கத்தின் ஆற்றல்மிகு எழுத்தாளர்களின் தொடர்ச்சியான இமையம் நடைபோடும் பாதையில் புகழ்மாலைகள் பல குவியட்டும்!:" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories