தமிழ்நாடு

15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை.. இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த மகிளா நீதிமன்றம்!

சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்குப் புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை..  இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த மகிளா நீதிமன்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மே.குளவாய்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இளைஞரான இவர் கடந்த 2021 டிசம்பர் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியைக் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி இருசக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றுள்ளார்.

பின்னர் மே. பூதக்குடி செங்கல் சூளை கொட்டகையில் வைத்து பலமுறை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்ணனை போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை..  இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த மகிளா நீதிமன்றம்!

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி சத்யா, குற்றம் உறுதி செய்யப்பட்டதால் கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார்.

15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை..  இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த மகிளா நீதிமன்றம்!

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தமிழக அரசு சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். இதனை அடுத்து குற்றவாளி கண்ணன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாடர்.

banner

Related Stories

Related Stories