தமிழ்நாடு

காவல் துறைக்கு ரூ.323.33 கோடி செலவில் 1000 வீடுகள் - காவலர்களுக்கு முதலமைச்சர் செய்த சிறப்பு நலத்திட்டம்!

காவல் துறை, தீயணைப்பு - மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு ரூ.323 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீடுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

காவல் துறைக்கு ரூ.323.33 கோடி செலவில் 1000 வீடுகள் - காவலர்களுக்கு முதலமைச்சர் செய்த சிறப்பு நலத்திட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு ரூ.323 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் ரூ.55 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீடுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (8.8.2022) சென்னை, கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பு வளாகத்தில் 186 கோடியே 51 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1036 காவலர் குடியிருப்புகளை திறந்து வைத்து, 5 காவலர்களுக்கு குடியிருப்புக்கான சாவிகளை வழங்கினார்.

காவல் துறைக்கு ரூ.323.33 கோடி செலவில் 1000 வீடுகள் - காவலர்களுக்கு முதலமைச்சர் செய்த சிறப்பு நலத்திட்டம்!

மேலும், உள்துறை சார்பில் 36 கோடியே 52 இலட்சம் ரூபாய் செலவில் 32 காவலர் குடியிருப்புகள், 4 காவல் நிலையங்கள், 2 காவல் துறை கட்டடங்கள், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை பணியாளர்களுக்கான 11 குடியிருப்புகள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணியாளர்களுக்கான 80 குடியிருப்புகள், 3 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள் மற்றும் 1 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கான பாசறை, 55 கோடியே 19 இலட்சம் ரூபாய் செலவில் “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 253 வீடுகள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, சென்னை, புதுப்பேட்டைக்கு சென்று, புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் 100 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 596 காவலர் குடியிருப்புகளை திறந்து வைத்து, 5 காவலர்களுக்கு குடியிருப்புக்கான சாவிகளை வழங்கினார்.

காவல் துறைக்கு ரூ.323.33 கோடி செலவில் 1000 வீடுகள் - காவலர்களுக்கு முதலமைச்சர் செய்த சிறப்பு நலத்திட்டம்!

காவல்துறை என்பது, குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்ற முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாநிலத்தின், அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளை கட்டுதல், ரோந்து வாகனங்களை வழங்குதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னை மாவட்டம் – கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பு வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 186 கோடியே 51 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1036 காவலர் குடியிருப்புகள்:

ஈரோடு மாவட்டம் – பெருந்துறை ஆகிய இடங்களில் 5 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 32 காவலர் குடியிருப்புகள்;

சென்னை மாவட்டம் – எம்.ஜி,ஆர் நகரில் காவல் நிலையம், ஈரோடு மாவட்டம் – ஈரோடு மற்றும் சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், கன்னியாகுமரி மாவட்டம் – கோட்டாரில் போக்குவரத்து ஒழங்கு பிரிவு காவல் நிலையம், என 3 கோடியே 73 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 காவல் நிலையக் கட்டடங்கள்;

காவல் துறைக்கு ரூ.323.33 கோடி செலவில் 1000 வீடுகள் - காவலர்களுக்கு முதலமைச்சர் செய்த சிறப்பு நலத்திட்டம்!

நாகப்பட்டினம் மாவட்டம் – வேதாரண்யம் காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, திருச்சிராப்பள்ளி மாவட்டம் – தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணி வளாகத்தில் நிர்வாக அலுவலகக் கட்டடம் என 4 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 காவல்துறை கட்டடங்கள்;

திருநெல்வேலி மாவட்டம் – அம்பாசமுத்திரம் கிளை சிறைச்சாலையில் 2 கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை பணியாளர்களுக்கான 11 குடியிருப்புகள்;

சென்னை மாவட்டம் – மணலியில் 13 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பணியாளர்களுக்கான 80 குடியிருப்புகள்;

திருப்பூர் மாவட்டம் – திருப்பூர் மற்றும் அவிநாசி, கோயம்புத்தூர் மாவட்டம் – பீளமேடு ஆகிய இடங்களில் 4 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள்;

சென்னை மாவட்டம் – மணலியில் 2 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பணியாளர்களுக்கான பாசறை கட்டடம்;

காவல் துறைக்கு ரூ.323.33 கோடி செலவில் 1000 வீடுகள் - காவலர்களுக்கு முதலமைச்சர் செய்த சிறப்பு நலத்திட்டம்!

“உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் சிவகங்கை வட்டம் – பையூர் பிள்ளைவயல், சேலம் மாவட்டம் – தாரமங்கலம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் - கண்டம்பாக்கம் ஆகிய இடங்களில் 55 கோடியே 19 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீருடை பணியாளர்களுக்காக கட்டப்பட்டுள்ள 253 வீடுகள்;

சென்னை மாவட்டம், புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் 100 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 596 காவலர் குடியிருப்புகள்;

என மொத்தம், 378 கோடியே 52 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் 2020-21ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான 3 கோடி ரூபாய்க்கான காசோலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர் அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் வழங்கினார்.

banner

Related Stories

Related Stories