தமிழ்நாடு

முதல்வரின் அடுத்த அதிரடி.. தமிழ்நாட்டில் குரங்கு அம்மை ஆய்வகம் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் முக்கிய தகவல்!

தமிழகத்தில் சென்னை கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்திலும் ஆய்வகம் அமைத்து ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் அடுத்த அதிரடி.. தமிழ்நாட்டில் குரங்கு அம்மை ஆய்வகம் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் முக்கிய தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குரங்கு அம்மை நாடுமுழுவதும் 15 இடங்களில் ஆய்வகங்கள் ஒன்றிய அரசு பரிசீலனை, தமிழகத்தில் சென்னை கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்திலும் ஆய்வகம் அமைத்து ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை பன்னாட்டு விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பயணிகள் குரங்கு அம்மை பற்றிய பரிசோதனை ஏற்பாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார். தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “குரங்கு அம்மை குறித்த ஆய்வு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுரைப்படி அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.

முதல்வர் உத்தரவுபடிபரிசோதனைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி முதல் பாதிப்பு கண்டறிந்தவுடன் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் முழுமையாக கொப்புளங்கள் உள்ளதா என கண்காணிக்கப்படுகிறது. முழு ஸ்கேனிங், 2 சதம் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

முதல்வரின் அடுத்த அதிரடி.. தமிழ்நாட்டில் குரங்கு அம்மை ஆய்வகம் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் முக்கிய தகவல்!

தற்போது உலகில் பல்வேறு நாடுகளில் 72 நாடுகளில் பாதிப்பு அதிகமாகிறது. உலகம் முழுவதும்14,533 பேர் இதுவரை பாதிப்பு கூடுதலாகியுள்ளது. இந்தியாவில் கேரளா, டெல்லி, தெலங்கானா பாதிப்பு கூடுதலாக உள்ளது. பன்னாட்டு விமான நிலையம் தொடர்ந்து கண்காணிப்பு, கேரள ஆந்திர எல்லைகளில் இருந்து வருபவர்களை கண்காணிப்பு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரைக்கு தினமும் 3 வெளிநாட்டு விமானங்கள் வருகிறது, ஒவ்வொரு நாளும் 400 பேர் வரை வருகிறார்கள். மழைக்காலம் துவங்கியவுடன் அனைத்து மாவட்ட நிர்வாகங்களில் சுகாதாரத் துறை உள்ளாட்சித்துறை ஒருங்கிணைந்து டெங்கு, மலேரியா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசுக்களை லார்வா நிலையிலேயே ஒழிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல்வரின் அடுத்த அதிரடி.. தமிழ்நாட்டில் குரங்கு அம்மை ஆய்வகம் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் முக்கிய தகவல்!

தடுப்பூசி ஜனவரி 16 முதல் ஒன்றிய அரசு சார்பில் 12 வயதிலிருந்து 14 வயதுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பூஸ்டர் தடுப்பூசி தனியார் 386.25 பைசா கட்டணம் என்ற நிலை மாற்றி, தமிழக முதல்வரின் தொடர் வேண்டுகோளை ஏற்று 75 நாட்கள் இலவசமாக ஒன்றுவிட்ட ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஞாயிறு மெகா தடுப்பூசிமுகாம் அன்று ஒரேநாளில் 18 லட்சத்து 8000 பேர் தடுப்பூசி செலுத்திகொண்டனர். வரும் 7ம்தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றார்.

மேலும் குரங்கு அம்மை குறித்து நாடுமுழுவதும் 15இடங்களில் ஆய்வகங்கள் அமைக்க ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது. அதில் சென்னை கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்திலும் ஆய்வகம் அமைத்து ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories