தமிழ்நாடு

வெளிநாட்டிற்குக் கடந்த முயன்ற 2 சாமி சிலைகள்.. 2 பேரை கையும் களவுமாகப் பிடித்த போலிஸ்: சிக்கியது எப்படி?

வெளிநாட்டிற்குக் கடந்த இருந்த 2 சிலைகளை , சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலிஸார் மீட்டு 2 பேரை கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டிற்குக் கடந்த முயன்ற 2 சாமி சிலைகள்.. 2 பேரை கையும் களவுமாகப் பிடித்த போலிஸ்: சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குநர் கி. ஜெயந்த் முரளிக்குக் கும்பகோணத்தைச் சேர்ந்த சிலர் இரண்டு புராதனமான சரஸ்வதி, லெட்சுமி சிலைகளை வைத்து இருப்பதாகவும், அவைகளை விற்க முயற்சி செய்வதாகவும் ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து குற்றவாளிகளைப் பிடித்த தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலிஸார் விசாரணை செய்ததில் தஞ்சாவூரைச் சேர்ந்த ரஞ்சித், கும்பகோணத்தைச் சேர்ந்த உதயகுமார், ஆகியோரிடம், ஒரு அடி உயரமும் 1/2 அடி அகலமும் சுமார் 4 கிலோ எடையும் கொண்ட ஒரு சரஸ்வதி உலோக சிலையும், சுமார் 4 அடி உயரமும் சுமார் 2 கிலோ எடையும் கொண்ட ஒரு லெட்சுமி உலோக சிலையும் வைத்திருப்பது தெரியவந்தது.

வெளிநாட்டிற்குக் கடந்த முயன்ற 2 சாமி சிலைகள்.. 2 பேரை கையும் களவுமாகப் பிடித்த போலிஸ்: சிக்கியது எப்படி?

பின்னர் சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிலைகளை வாங்கிக் கொள்வதாகவும், விலை குறித்து சிலைகளைப் பார்வையிட்டுப் பேசிக்கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

இதை உண்மை என நம்பிய இவரும் கடந்த 29ம் தேதி கும்பகோணம் சுவாமி மலை அருகே சிலைகளை எடுத்துக் கொண்டு வந்துள்ளனர். அங்கு அங்கிருந்த சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் இருவரையும் பிடித்து 2 சிலைகளையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

வெளிநாட்டிற்குக் கடந்த முயன்ற 2 சாமி சிலைகள்.. 2 பேரை கையும் களவுமாகப் பிடித்த போலிஸ்: சிக்கியது எப்படி?

மேலும் இருவரையும் கைது செய்து எந்த கோவிலிலிருந்து இந்த சிலைகள் எடுத்து வரப்பட்டது, யாருக்கு விற்க முயற்சி செய்யப்பட்டது என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories