தமிழ்நாடு

இறந்த தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த பிள்ளைகள்: ஊர் மக்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

திருவண்ணாமலையில், இறந்த தந்தையின் உடலை அடக்கம் செய்யப் பணம் இல்லாமல் தவித்த பிள்ளைகளுக்குக் கிராம மக்கள் உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இறந்த தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த பிள்ளைகள்: ஊர் மக்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ராட்டின மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மனைவி மகேஸ்வரி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மனைவி மகேஸ்வரி உயிரிழந்ததால் மூன்று பிள்ளையையும் ஜெயசீலன் கூலி வேலைக்குச் சென்று வளர்த்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால் மூன்று பிள்ளைகளும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளனர்.மேலும் தந்தையின் உடலை இறுதிச் சடங்கு செய்வதற்குக் கூட அவர்களிடம் பணம் இல்லை. இதனால் மூன்று பேரும் கண்ணீருடன் தவித்து வந்துள்ளனர்.

இது பற்றி அறிந்த கிராம மக்கள் உடனே தங்களிடம் இருந்த பணத்தைக் கொண்டு ஜெயசீலனின் இறுதி நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இதையடுத்து கிராம மக்களுக்குக் கண்ணீருடன் மூன்று பிள்ளைகளும் நன்றி தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories