தமிழ்நாடு

செல்போனில் வந்த போட்டோ.. பதறியடித்து காதலி வீட்டிற்குச் சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி !

சென்னையில் காதலன் பேசாததால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்போனில் வந்த போட்டோ.. பதறியடித்து காதலி வீட்டிற்குச் சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இளம் பெண்ணான இவர் சென்னை விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் லோக்கேஷ் என்ற இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். காதலர்கள் இருவரும் செல்போனில் நீண்ட நேரம் பேசுவது வழக்கம்.

இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் செல்போனில் பேசியுள்ளனர். அப்போது லோக்கேஷ் தனக்கு வேலை இருப்பதாகவும், பிறகு பேசுவதாகவும் கூறியுள்ளார். ஆனால் பிரியதர்ஷினி நீண்ட நேரம் பேசுமாறு காதலனிடம் கூறியுள்ளார். இருப்பினும் லோக்கேஷ் தனது இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதனால் மனவேதனையடைந்த பிரியதர்ஷினி, தூக்கிட்டு தற்கொலை செய்வது போல் புகைப்படம் ஒன்றை எடுத்து காதலனுக்கு அனுப்பியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த காதலன் உடனே பிரியதர்ஷினி வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது அவர் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் பிரியதர்ஷினி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலனிடம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வதுபோல் நாடகமாட நினைத்து கடையில் அது நிஜமாகிபோனது அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories