தமிழ்நாடு

6 மாதத்திற்கு முன்பு திருமணம் நிச்சயம்.. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ஜோடிக்கு நேர்ந்த சோகம்!

திருமணம் நிச்சயிக்கப்பட்ட, ஜோடிகள் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

6 மாதத்திற்கு முன்பு திருமணம் நிச்சயம்.. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ஜோடிக்கு நேர்ந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கிருஷ்ணகிரி மாவட்டம், உரிகம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இளைஞரான இவருக்கு, தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அபிநயா என்ற பெண்ணுடன் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உரிகம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அபிநயா வந்துள்ளார்.

அப்போது அங்கிருந்து குட்டை ஒன்றில் குளிக்கச் சென்றுள்ளார். பிறகு,குட்டையில் ஆழமான பகுதியில் சென்றதால் நீச்சல் தெரியாத அபிநயா நீரில் மூழ்கியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சிவா, அவிநயாவை காப்பாற்றுவதற்காக அவரும் குட்டையில் இறங்கியுள்ளார். அப்போது இருவரும் குட்டை நீரில் மூழ்கியுள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்த வந்த போலிஸாரும், தீயணைப்பு வீரர்களும் இரண்டு பேரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட, ஜோடிகள் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories