தமிழ்நாடு

”அது வெறும் கல்தான்; ஐம்பொன் இல்ல” - 13 லட்சம் கேட்டு ஏமாற்ற முயற்சித்த மாமனார் மருமகன் சிக்கியது எப்படி?

தாராபுரத்தில் 13 லட்சத்துக்கு ஐம்பொன் என கல் சிலையை விற்க முயன்றவர் கைது.

”அது வெறும் கல்தான்; ஐம்பொன் இல்ல” - 13 லட்சம் கேட்டு ஏமாற்ற முயற்சித்த மாமனார் மருமகன் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா (72) . அவருடைய மகளை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த மந்திரவாதி அப்பா சேட் (44) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து வைத்துள்ளார்.

அப்பா சேட் அவ்வப்போது தாராபுரத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு வந்து சென்று உள்ளார். அப்போது கருப்பையா தனது வீட்டில் அரை அடி உயரமுள்ள கல் விநாயகர் சிலை ஒன்றை வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்து வந்ததை பார்த்துள்ளார்.

இதனையடுத்து மாமனார் கருப்பையாவின் இந்த சிலையை ரசாயனத்தை பூசி பசும் பாலை ஊற்றினால் பால் பச்சை நிறமாக மாறும் அந்த பாலை பருகினால் உடலில் உள்ள அனைத்து வியாதிகளும் தீரும் என்று கூறினார்.

இதனைக் கேட்ட கருப்பையா அந்த சிலையை அப்பா சேட்டிடம் கொடுத்து அதன் மீது ரசாயனம் பூசி திரும்ப கொண்டு வந்து கொடுக்குமாறு கூறினார். அதன்படி அந்த சிலையை வாங்கி சென்ற அப்பா சேட் அதன் மீது ரசாயனத்தை தடவி மாமனாரிடம் கொண்டு வந்து கொடுத்தார். அதன் பின்னர் இருவரும் அந்த சிலை மீது பசும் பாலை ஊற்றியிருக்கிறார்கள். அப்போது அந்தப் பால் பச்சை நிறமாக மாறியது.

”அது வெறும் கல்தான்; ஐம்பொன் இல்ல” - 13 லட்சம் கேட்டு ஏமாற்ற முயற்சித்த மாமனார் மருமகன் சிக்கியது எப்படி?

இதையடுத்து அந்த சிலையை விற்றால் அதிகமாக சம்பாதிக்கலாம் என அந்த சிலையை விற்பனை செய்ய முடிவு செய்தார். அதன்படி அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த ராஜா (43) என்பவரை அழைத்து வந்து அந்த சிலையின் மகிமை குறித்து பேசி, அது ஐம்பொன் சிலை என்றும் ரூபாய் 13 லட்சம் தருமாறு கூறினார்.

ஆனால் அவர்களை கூறியதை நம்ப மறுத்த ராஜாவுக்கு அவர்கள் மீதும் அந்த சிலை மீதும் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அது ஐம்பொன் சிலை இல்லை என்று நம்மை ஏமாற்றி பணம் பறிக்க முயல்கிறார்கள் என்று தெரிந்துக்கொண்ட ராஜா அந்த சிலையை வேண்டாம் என்று கூறிவிட்டு தாராபுரம் போலிஸில் புகார் கொடுத்திருக்கிறார்.

புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலிஸார் கருப்பையா வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். போலிஸ் வருவதை அறிந்த கருப்பையா தப்பி ஓடிவிட்டார். அப்பாசெட் மட்டும் அங்கு நின்று கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலிஸார் அந்த சிலையை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கருப்பையாவை தேடிவருகிறார்கள். பறிமுதல் செய்த சிலையை ஆய்வுக்கு போலிஸார் அனுப்பி வைத்தனர்.

banner

Related Stories

Related Stories