தமிழ்நாடு

கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம் : ஒரே ஊரைச் சேர்ந்த 8 பேர் பலி - 20 பேர் படுகாயம்!

திருப்பத்தூர் அருகே கோயிலுக்குச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம் : ஒரே ஊரைச் சேர்ந்த 8 பேர் பலி - 20 பேர் படுகாயம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புதூர்நாடு அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சேம்பரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு தரிசனம் செய்ய மினி வேன் மூலம் சென்றனர்.

அப்போது வாகனம் தனது கட்டுபாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலத்த படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோரை அப்பகுதி மக்கள் மற்றும் காவல்துறையினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

சுகந்தா (55), துர்கா (40), பரிமளா (12), பவித்ரா (18), செல்வி (35), மங்கை (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கோயிலுக்கு செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் ஒரே ஊரைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி மாணவி 16 வயது ஜெயப்பிரியா என்பவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பலியாகி உள்ளார். மேலும் இதுதொடர்பாக போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories