தமிழ்நாடு

இணையத்தில் வைரலாகி வரும் #எதுவும்தெரியாது.. ஓ.பி.எஸ்-யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை குறித்து எதுவும் தெரியாது என ஓ.பன்னீர்செல்வம் கூறியதை அடுத்து இணையத்தில் #எதுவும்தெரியாது வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகி வரும் #எதுவும்தெரியாது.. ஓ.பி.எஸ்-யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் ஆஜராக சொல்லி 8 முறை சம்மன் அனுப்பியும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாமல் இருந்துவந்தார்.

இதையடுத்து அவருக்கு 9வது முறையாகச் சம்மன் அனுப்பட்ட நிலையில் நேற்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார். அப்போது நீதிபதி ஜெயலலிதாவிற்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது உள்ளிட்ட 78 கேள்விகள் கேட்கப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு பெரும்பாலும் ஓ.பன்னீர்செல்வம் எனக்கு எதுவும் தெரியாது என்ற பதிலையே கூறியுள்ளார். இவரின் இந்த பதிலை கேட்டு அ.தி.மு.க தொண்டர்கள் உட்பட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து மீண்டும் இன்று ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ளார்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் #எதுவும்தெரியாது என்ற ஹேஷ்டேக் வைரலாகி இருகிறது. இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி நெட்டிசன்கள் பலரும் தங்களின் கருத்துகளைப் பதிவிட்டு ஓ.பன்னீர்செல்வத்தை கலாய்த்து வருகின்றனர்.

அதுவும் குறிப்பாக தர்மயுத்தம் நடத்தியபோது ஓ.பன்னீர்செல்வம் பேசிய வீடியோவை குறிப்பிட்டு அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும் மீம்ஸ் கார்டுகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories