தமிழ்நாடு

கழக அரசின் இரண்டாவது பட்ஜெட் : இன்று தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் PTR.பழனிவேல் தியாகராஜன்!

தமிழ்நாடு அரசின் 2022 - 23 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.

கழக அரசின் இரண்டாவது  பட்ஜெட் : இன்று தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் PTR.பழனிவேல் தியாகராஜன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக சட்டப் பேரவை இன்று (18.3.2022) கூடுகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் 2022 - 23 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் இன்று (18.3.2022) தொடங்குகிறது. இன்று (18.3.2022) காலை 10 மணிக்கு 2022 - 23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.

பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் என்று சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவிப்பார்.

சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தை நேரடி ஒளிபரப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான கழக அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories