தமிழ்நாடு

பேருந்தை முந்தி சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. நடந்தது என்ன?

ராமநாதபுரத்தில் பேருந்தில் சிக்கி இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்தை முந்தி சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஞ்சனி. இவர் தனியார் வங்கியில் காசாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் இன்று ராமநாதபுரம் - தேவிப்பட்டிணம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தை ரஞ்சனி முந்தி செல்ல முயன்றபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் பேருந்து அவர் மீது ஏறி இறங்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது பற்றி அறிந்து அங்கு வந்த போலிஸார் ரஞ்சனியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories