தமிழ்நாடு

நகைக்காக சிறுவனை கொன்று பீரோவில் பூட்டிவைத்த பெண்.. விசாரணையில் வெளிவந்த கொடூரம்!

தங்க நகைக்காக சிறுவனை கொலை செய்து பீரோவில் அடைத்து வைத்த பெண்ணை போலிஸார் கைது செய்தனர்.

நகைக்காக சிறுவனை கொன்று பீரோவில் பூட்டிவைத்த பெண்.. விசாரணையில் வெளிவந்த கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கன்னியாகுமரி மாவட்டம், கடியப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் ரிச்சார்ட்டு. இவரது மனைவி சகாய சில்ஜா. இந்த தம்பதிக்கு ஜோகன் ரிஷி என்ற மகன் உள்ளார். கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் தனது குழந்தைகளுடன் சகாய சில்ஜா தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், சிறுவன் ஜோகன் ரிஷி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். இப்போது திடீரென சிறுவன் காணவில்லை. இதையடுத்து சிறுவனைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

பின்னர், சிறுவன் காணாதது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்கு பதிவு செய்து பக்கத்து வீட்டில் சிக்கும் பாத்திமா என்ற பெண்ணை போலிஸார் விசாரணை செய்தனர்.

அப்போது, பொதுமக்கள் பாத்திமா வீட்டிற்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதில் வீட்டிலிருந்த பீரோ உடைந்து கதவு திறந்தபோது சிறுவன் வாயில் துணியால் கட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

நகைக்காக சிறுவனை கொன்று பீரோவில் பூட்டிவைத்த பெண்.. விசாரணையில் வெளிவந்த கொடூரம்!

பின்னர், சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலிஸார் விசாரணையில், சிறுவன் அணிந்திருந்த நகைக்காக ஆசைப்பட்டு அவனை வீட்டிற்கு தூக்கிச் சென்று கொலை செய்து பீரோவில் பூட்டியாக பாத்திமா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தங்க நகைக்கு ஆசைப்பட்டு சிறுவனைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories