தமிழ்நாடு

சென்னையில் சாலைப் பணிகளை இரவில் திடீரென ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; அசந்துப்போன மக்கள்!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வாரன்ஸ் சாலை மற்றும் மகாலிங்கபுரம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சாலை அமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னையில் சாலைப் பணிகளை இரவில் திடீரென ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; அசந்துப்போன மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (13.01.2022) பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்தில், மழையின் காரணமாக சேதமடைந்த வாரன்ஸ் சாலை மற்றும் மகாலிங்கபுரம் சாலைகளை புதிய சாலைகளாக அமைக்கும் பணிகளை நேற்று இரவு நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக சேதமடைந்த பேருந்துச் சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளைக் கணக்கெடுப்பு செய்து புதிய சாலைகள் அமைக்கவும், பணிகளை விரைவாக தொடங்கிடவும், பணி ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு சாலை தரம் உள்ளதா என்பதை கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழையின் காரணமாக சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க 312 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 1,656 பேருந்து மற்றும் உட்புறச் சாலைகள் சீரமைப்புப் பணிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில், முதலமைச்சர் அவர்கள் நேற்று (13.01.2022) இரவு தேனாம்பேட்டை மண்டலம், வாரன்ஸ் சாலை மற்றும் மகாலிங்கபுரம் சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை அகழ்ந்தெடுக்கும் (Milling) பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், மகாலிங்கபுரம் சாலையில் தார்க்கலவையில் தாரின் சதவிகிதம் சரியான விகிதத்தில் உள்ளதா எனவும், சாலையில் மழைநீர் தேங்காவண்ணம் சரியான சாய்தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளதா எனவும், ஆய்வு செய்தார். மேலும், சாலை அமைக்கும் போது தாரின் வெப்ப நிலை சரியான அளவிற்கு இருப்பதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, தெற்கு வட்டார துணை ஆணையாளர் ஷேக் அப்துல் ரகுமான், தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories