தமிழ்நாட்டில் ஜனவரி, 15,18,26 ஆகிய மூன்று நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், ஜனவரி 15 திவள்ளூவர் தினம், 18ம் தேதி வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவுநாள், 26 குடியரசு தினம் இந்த மூன்று நாட்கடிளலும் மதுக்கடைகளை மூட வேண்டும்.
இதையொட்டி மேற்கண்ட நாள்களில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் அரசு உரிமம் பெற்ற பார்களை கடை மேற்பார்வையாளர்கள் பூட்டி சீல் வைக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 9ம் தேதி முழு ஊரடங்கு என்பதால் அன்று மதுக்கடை திறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி மாதத்தில் மட்டும் 4 நாட்கள் மதுக்கடை மூடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.