தமிழ்நாடு

"இது தற்காலிகமல்ல விரைவில் நிரந்தரமாகும்": மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கையூட்டிய முதல்வர்!

மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மரப்பாதையை விரைவில் நிரந்தரப் பாதையாக மாற்றுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"இது தற்காலிகமல்ல விரைவில் நிரந்தரமாகும்": மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கையூட்டிய முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக கடல் அலைகளை கண்டு ரசிக்கும் படி பிரத்யேகமாக மரப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மரப்பாதையை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். மேலும் உதயநிதி ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளிகளுடன் கடல்பரப்பு வரை சென்று மாற்றுத்திறனாளிகள் கடல் நீரில் கால் நனைப்பதை கண்டு மகிழ்ந்தார்.

இந்தப் பாதை ஜனவரி 3ம் தேதி வரை புழக்கத்தில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜனவரி 16ம் தேதி வரை நீட்டிக்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிப் பாதையினை விரைவில் நிரந்தரம் ஆக்குவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டரில்,"எத்தனை முறை சென்றாலும் சலிக்காதது கடல் என்பார்கள். அந்தக் கடலலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் தற்காலிகப் பாதையினை ஏற்படுத்தியுள்ளோம்; விரைவில் நிரந்தரம் ஆக்குவோம். சிறிய பணிதான் இது; பெரிய மாற்றத்துக்குத் தொடக்கமும் கூட." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories