தமிழ்நாடு

“இளைஞரின் உயிரோடு விளையாடிய போலி மருத்துவர்.. மருத்துவமனைக்கு சீல் வைத்து போலிஸ் அதிரடி” : நடந்தது என்ன ?

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே போலி டாக்டர் மருத்துவம் பார்த்து தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“இளைஞரின் உயிரோடு விளையாடிய போலி மருத்துவர்.. மருத்துவமனைக்கு சீல் வைத்து போலிஸ் அதிரடி” : நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவர் அதே கிராமத்தில் மருந்தகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், விடுமுறைக்கு வந்த பிரபாகரன் உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து பிரபாகரன் நாச்சிகுப்பம் கூட்டு ரோடு சாலையில் மருந்தகம் வைத்திருந்த தேவராஜ் என்பவரிடன் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தேவராஜ் சிகிச்சை அளித்துள்ளார். இந்த நிலை சிகிச்சை பெற்ற பிரபாகரன் இரவு வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு மீண்டும் உடல்நிலை மிகவும் மோசமனதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் உறவினர்கள் பிரபாகரனை வேப்பனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு அவரை பரிசோதித மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவரது உறவினர்கள் வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தை அடுத்து மருத்துவம் பார்த்த தேவராஜ் என்பவரை கைது செய்த வேப்பனப்பள்ளி போலிசார் விசாரனை நடத்தினர்.

இதில் தேவராஜ் மருத்துவம் படிக்கமால் போலி டாக்டர் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வேப்பனப்பள்ளி போலிஸார் அவரது மருந்தகத்திற்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories