தமிழ்நாடு

மொட்டை மாடியில் இருந்து குதித்த போது இறந்தே பிறந்த ஆண் குழந்தை; IIT மாணவி கவலைக்கிடம்; சென்னையில் பகீர்!

வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயற்சித்த போது இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.

மொட்டை மாடியில் இருந்து குதித்த போது இறந்தே பிறந்த ஆண் குழந்தை; IIT மாணவி கவலைக்கிடம்; சென்னையில் பகீர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது 53. இவரது மனைவி சாவித்திரி மற்றும் மகள் (21). மகன் ஆகியோருடன் வசித்து வருகிறார். ராஜேந்திரன் சினிமா துறையில் லைட் மேனாக வேலை செய்து வருகிறார். மகள் கிண்டியில் உள்ள ஐடிஐ யில் இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் எட்டு மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். நேற்று இரவு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து திடீரென கீழே குதித்ததில் சம்பவ இடத்தில் இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக கோடம்பாக்கம் மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாணவி அனுமதிக்கப்பட்ட போது மருத்துவரின் ஆலோசனைப்படி மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இறந்த நிலையில் பிறந்த ஆண் குழந்தையை கோடம்பாக்கம் மகப்பேறு மருத்துவமனையில் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 316 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories