தமிழ்நாடு

பயிர் சேதங்களை ஆராய அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் குழு அமைப்பு - முதல்வர் துரித நடவடிக்கை!

டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களை ஆய்வு அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பயிர் சேதங்களை ஆராய அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் குழு அமைப்பு - முதல்வர் துரித நடவடிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மழை வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களைப் பார்வையிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டான் உத்தரவு

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து, தற்போது பயிர்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும், பயிர் சேத விவரங்களை அறியவும், அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றினை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (11-11-2021) உத்தரவிட்டுள்ளார்கள்.

இந்தக் குழுவில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித் துறை கே.ஆர். பெரியகருப்பன், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் துறை அமைச்சர்.சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர் உடனடியாக டெல்டா மாவட்டங்களுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்திட ஏதுவாக முதலமைச்சர் அவர்களுக்கு அறிக்கை தர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories