தமிழ்நாடு

"பள்ளிக் குழந்தைகள் மீது அக்கறை கொண்டுள்ள அரசு இது” : செயல்பாட்டில் நிரூபித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

"பள்ளிக் குழந்தைகள் மீது அக்கறை கொண்டுள்ள அரசு இது” : செயல்பாட்டில் நிரூபித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பள்ளிக் கல்வித்துறையின் “இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை விழுப்புரம் மாவட்டம், முதலியார்குப்பத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கடந்த 1½ ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் பள்ளிகள் இயங்காத நிலையில் பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதோடு கற்றல் இடைவெளியும் ஏற்பட்டுள்ளதை சரி செய்ய தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையால் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தை விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், முதலியார்குப்பம் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தை துவக்கி வைத்த மாண்புமிகு முதலமைச்சர், தமிழ்நாடு அரசு குழந்தைகளின் பள்ளிக் கல்வி மற்றும் எதிர்காலத்தில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்றும், ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டமானது குடியிருப்பு அடிப்படையில் மாணவ, மாணவியர்களை அவர்கள் வசிப்பிடம் அருகே சென்று தன்னார்வலர்களின் பங்கேற்புடன் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்க வழிவகை செய்கிறது என்றும், இத்திட்டத்தினை பெற்றோர்களும், குழந்தைகளும், பகுதி மக்களும், தன்னார்வலர்களும் நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்தி, அமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக ஒன்றிணைத்து, நம் குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான பாதையை அமைத்து கொடுப்பதற்காக வகுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய மாண்புமிகு முதலமைச்சர், இத்திட்டமானது ஒரு அரசு திட்டமாக மட்டுமில்லாமல் பெற்றோர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், ஆசிரியப் பெருமக்கள் பலதுறையைச் சார்ந்த பிரபலங்கள் என அனைவரும் இணைந்து முன்னெடுத்துச் செல்லும் ஒரு இயக்கமாக திட்டமிடப்பட்டுள்ளது என்றும்; இம்முயற்சிக்கு மக்கள் அனைவரின் தீவிர பங்கெடுப்பு தேவைப்படுகிறது என்றும்; நம் குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காக அரசுடன் இணைந்து செயலாற்றவும், தமிழ்நாட்டிலுள்ள படித்தவர்கள் இத்திட்டத்தில் தன்னார்வலர்களாகப் பங்கேற்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

"பள்ளிக் குழந்தைகள் மீது அக்கறை கொண்டுள்ள அரசு இது” : செயல்பாட்டில் நிரூபித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தின் அடிப்படையில் இக்கல்வியாண்டில் 6 மாத காலத்திற்கு, வாரத்திற்கு 6 மணிநேரம் தன்னார்வலர்களின் மூலம் மாணவர்களை அன்றாட கற்றல் செயல்பாடுகளில் எளிய முறையில் படிப்படியாகப் பங்கேற்கச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இல்லம் தேடிக் கல்வி” திட்டமானது தெரிவு செய்யப்பட்ட விழுப்புரம், கடலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி ஆகிய 12 மாவட்டங்களில் 2 வார காலத்திற்கு முன்னோட்ட அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு, அதன் வாயிலாகக் கிடைக்கப்பெறும் சிறந்த கற்றல் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு, பதிவு செய்துள்ள தன்னார்வலர்கள் கிராம அளவில் பள்ளி மேலாண்மைக் குழு மூலமாகத் தேர்வு செய்யப்படுவர். தன்னார்வலர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கிய பின் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் இணைக்கப்படுவர். நவம்பர் 15ஆம் தேதிக்குப் பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் படிப்படியாகவும் தொடர் பணியாகவும் நடைபெறும்.

“இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை அனைவருக்கும் கொண்டு செல்ல கலைக் குழுவினர் உதவியுடன் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் தீவிரமாக நடத்தப்படவுள்ளன. இதில் கிராம அளவில் சமூகப் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் கீழ்க்காணும் செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும்.

  • மிதிவண்டி பேரணி

  • வீதி நாடகம்

  • பொம்மலாட்டம்

  • கதை சொல்லுதல்

  • திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகள்

தன்னார்வலர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதைப் போலவே, 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதியாக இளங்கலை பட்டப் படிப்பு (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இத்திட்டத்திற்கென சேவையாற்ற விருப்பமுடைய 38 மாவட்டங்களிலுள்ள தன்னார்வலர்கள் அனைவரும் தங்கள் விவரங்களை illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளம் வழியே கணினி மற்றும் Smart Phone மூலமாகவும் மற்றும் அரசு உயர் மற்றும் மேனிலைப் பள்ளிகளில் உள்ள Hi-Tech Labs மூலமாகவும் பதிவு செய்ய நமது அரசு வழிவகை செய்துள்ளது.

"பள்ளிக் குழந்தைகள் மீது அக்கறை கொண்டுள்ள அரசு இது” : செயல்பாட்டில் நிரூபித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “இல்லம் தேடிக் கல்வி” திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட மாணவ, மாணவியரின் மிதிவண்டி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், திட்டக் கையேட்டினையும், திட்டக் கருப்பொருள் பாடல் மற்றும் காணொலியையும் வெளியிட்டு, தன்னார்வலர்களுக்கான செயலியையும் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடத்திற்கு சென்று மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுவதை பார்வையிட்டு, அவர்களுக்கு இனிப்புகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி, அவர்களுடன் உரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ரவிகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள்
ஆர். லட்சுமணன், என். புகழேந்தி, சி. சிவகுமார், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார், இ.ஆ.ப., விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன், இ.ஆ.ப., உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories