தமிழ்நாடு

“இந்தி தெரியாதவர் இந்தியர் இல்லையா?” : ட்விட்டரில் ட்ரெண்டாகும் #Reject_zomato : பின்னணி என்ன?

இந்தி தெரியாதவர்கள் இந்தியர் இல்லை என சொமேட்டோ நிறுவனம் வாடிக்கையாளரிடம் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“இந்தி தெரியாதவர் இந்தியர் இல்லையா?” : ட்விட்டரில் ட்ரெண்டாகும் #Reject_zomato : பின்னணி என்ன?
DIGI TEAM 1
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் விகாஷ் என்ற இளைஞர் சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். பின்னர் ஆர்டர் செய்யப்பட்ட உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படவில்லை.

இதனால் விகாஷ் சொமேட்டோ சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு, பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளார். அப்போது, “மொழிப் பிரச்சனையால் சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்திடம் இது குறித்துக் கேட்க முடியவில்லை” என சொமேட்டோ சேவை மையம் கூறியுள்ளது.

இதையடுத்து விகாஷ், “தமிழ்நாட்டில் சொமெட்டோ செயல்பட்டால், அங்கு வாழும் மக்களின் மொழியை அறிந்தவர் வேலைக்கு அமர்த்த வேண்டும்” என கூறியுள்ளார். இதற்கு, “இந்தி நமது தேசிய மொழி,எல்லோரும் குறைந்தபட்சம் இந்தி தெரிந்திருக்க வேண்டும்” என சொமேட்டோ சேவை மையம் விகாஷிடம் கூறியுள்ளது.

சொமேட்டோ நிறுவனத்தின் இந்த உரையாடலை விகாஷ் தனது ட்விட்டரில் பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தி.மு.க மக்களை உறுப்பினர் செந்தில்குமார் சொமேட்டோ நிறுவனத்திற்கு கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து செந்தில்குமார் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தி எப்போது தேசிய மொழியாக மாறியது. தமிழ்நாட்டில் உள்ள வாடிக்கையாளர்கள் ஏன் இந்தி தெரிந்து கொள்ள வேண்டும். எந்த அடிப்படையில் வாடிக்கையாளர்களை இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினீர்கள். வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

இதேபோல் பலரும் சொமேட்டோ நிறுவனத்திற்குக் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் ட்விட்டரில் #boycottzomato, #Reject_zomato போன்ற ஹேஸ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories