தமிழ்நாடு

‘சீக்கிரம் நடங்க பாஸூ’.. குழியில் சிக்கிய யானை குட்டி: 7 மணி நேரம் போராடி தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறை

பந்தலூர் அருகே குழியில் சிக்கிக்கொண்ட பிறந்த ஒரு மாதமான யானை குட்டி ,7 மணி நேரம் போராடி தாய் யானையுடன் வனத்துறை ஊழியர்கள் சேர்த்து வைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on
‘சீக்கிரம் நடங்க பாஸூ’.. குழியில் சிக்கிய யானை குட்டி: 7 மணி நேரம் போராடி தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறை

நீலகிரி மாவட்டம் பந்தலூர் சரகத்தில் உள்ள தங்கம் சுரங்கம் பகுதியில் உள்ள ஒரு குழியில் குட்டி யானை சத்தம் கேட்டுள்ளது. இதை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

‘சீக்கிரம் நடங்க பாஸூ’.. குழியில் சிக்கிய யானை குட்டி: 7 மணி நேரம் போராடி தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறை

அப்போது அங்கிருந்த குழியில் பிறந்த ஒரு மாதம் ஆன பெண் யானைக்குட்டி ஒன்று குழியில் சிக்கி இருப்பதை பார்த்த வனத்துறையினர் கால்நடை மருத்துவ குழு உதவியுடன் குழியிலிருந்து மீட்டெடுத்தனர்.

‘சீக்கிரம் நடங்க பாஸூ’.. குழியில் சிக்கிய யானை குட்டி: 7 மணி நேரம் போராடி தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறை

இதனைத் தொடர்ந்து வனப்பகுதி முழுவதும் தாய் யானையை தேடும் பணியில் ஈடுபட்டு சுமார் 7 மணி நேரம் போராடி பிறந்த குட்டி யானையை தாய் யானையுடன் சேர்த்து வைத்தனர். குட்டியை பார்த்தவுடன் தாய் யானை, பாசத்துடன் ஓடிவந்து குட்டி யானையை அழைத்து சென்றது. இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

banner