தமிழ்நாடு

தன் காதலை சொன்ன மகளுக்கு அரிவாள் வெட்டு; தந்தை தூக்கிட்டு தற்கொலை - திருச்சி அருகே பயங்கரம்!

மகளை அரிவளால் சரமாரியாக வெட்டிய தந்தை தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன் காதலை சொன்ன மகளுக்கு அரிவாள் வெட்டு; தந்தை தூக்கிட்டு தற்கொலை - திருச்சி அருகே பயங்கரம்!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அடுத்த அதவத்தூர் சக்தி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மூர்த்தி (72). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.

முதல் மனைவி பிருந்தா தேவி. இவரது மகன்‌ அருண். முதல் மனைவி மறைந்ததை தொடர்ந்து ‌இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவரது பெயர் லதா. இரண்டாவது மனைவிக்கு பிரபாகரன் என்ற மகனும் கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் மூர்த்தியின் மனைவி லதாவும் மகன் பிரபாகரனும் குடும்ப விழாவில் பங்கேற்ற பிறகு இன்று வீடு திரும்பியுள்ளனர்.

தன் காதலை சொன்ன மகளுக்கு அரிவாள் வெட்டு; தந்தை தூக்கிட்டு தற்கொலை - திருச்சி அருகே பயங்கரம்!

அப்போது வீட்டிற்குள் மூர்த்தி தூக்கில் தொங்கிய படியும், கீர்த்தனாவுக்கு கை, கால், முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததை கண்டு பதறிப்போயினர்.

மேலும் அருகில் அரிவாள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கீர்த்தனாவை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சோமரசம்பேட்டை போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் தான் காதலிப்பது குறித்து தந்தையிடம் கீர்த்தனா கூறியதாகவும், அதனால் ஆத்திரடமடைந்த மூர்த்தி இப்படியான செயலில் ஈடுபட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் தீவிர விசாரணையை போலிஸார் மேற்கொண்ட் வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories