தமிழ்நாடு

“கார் ஓட்டிப் பழகியபோது விபத்து... புது மாப்பிள்ளை பலி” : பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

செங்கல்பட்டு மஹிந்திரா வேர்ல்டு சிட்டி அருகே கார் ஓட்டி பயிற்சி மேற்கொள்ளும்போது நடைபயிற்சி சென்றுகொண்டிருந்த புது மாப்பிள்ளை மீது கார் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“கார் ஓட்டிப் பழகியபோது விபத்து... புது மாப்பிள்ளை பலி” : பதறவைக்கும் சிசிடிவி காட்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

செங்கல்பட்டு அருகேயுள்ள மஹிந்திரா வேர்ல்டு சிட்டி பகுதியை சேந்தவர் செல்வம். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் செல்வத்திற்கு திருமணம் நடந்துள்ளது. செல்வம் மஹிந்திரா சிட்டி பகுதியில் தினமும் அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி செல்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி அதிகாலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, மஹிந்திரா சிட்டியை சேர்ந்த ஒருவர் அதிகாலை நேரத்தில் தனது மனைவிக்கு கார் பயிற்சி கொடுக்கும்போது, சாலை ஓரமாக நடைபயிற்சி சென்றுகொண்டிருந்த செல்வம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வம் சிகிக்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்த செல்வத்தின் உறவினர்கள் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

புகாரின் பேரில் போலிஸார் விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடைபயிற்சி சென்றுகொண்டிருந்த செல்வம் மீது மோதிய பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories