தமிழ்நாடு

“வடிவேலு காமெடி போல உண்மையிலேயே பஸ் ஸ்டாண்டை காணவில்லை” : சு.வெங்கடேசன் எம்.பி சாடல்!

மதுரை 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தால் பேருந்து நிலையத்தையே காணவில்லை என்று சு.வெங்கடேசன் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.

“வடிவேலு காமெடி போல உண்மையிலேயே பஸ் ஸ்டாண்டை காணவில்லை” : சு.வெங்கடேசன் எம்.பி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மதுரை ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமையில் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநகராட்சி ஆணையர் கே.பி.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகிக்க, எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நடந்த தவறுகள், அதனை எப்படிச் சரிசெய்யலாம் என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் செய்யப்பட்டன.

இக்கூட்டத்திற்குப் பின்னர் பேசிய நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ‘‘மதுரை மக்களை எச்சரிக்கிறேன். இன்று இருக்கும் சூழ்நிலையில் பேருந்து நிலையத்தைத் திறந்தால் உறுதியாக மதுரையில் நகரப் போக்குவரத்து நகராது.

பெரியார் பேருந்து நிலையம் பல்லடுக்கு வாகன நிறுத்தத்தில் 1,100 இருசக்கர வாகனங்கள், 110 கார்கள், மீனாட்சியம்மன் கோயில் வாகன நிறுத்தத்தில் 5000 இருசக்கர வாகனங்கள், 450 கார்கள் நிறுத்தப்பட உள்ளன.

மேலும் அந்தப் பல்லடுக்கு வாகன நிறுத்தத்தில் பல நூறு கடைகள் உள்ளன. இவை செயல்பட ஆரம்பித்தால் பெரியார் பேருந்து நிலையம், மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் முன்பை விட மிகப்பெரிய நெரிசல் ஏற்படும். இதையெல்லாம் ஏன் ஆய்வு செய்யாமலே இந்தத் திட்டத்தை ஆரம்பித்தார்கள் என்று தெரியவில்லை.

'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் 80% நிறைவடைந்துள்ளது. ஆனால், ஸ்மாரட் சிட்டி ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் இரண்டாவது கூட்டமே தற்போதுதான் நடக்கிறது. கடந்த ஜனவரியில்தான் முதல்முறையாக கூட்டம் நடந்தது.

மேயரும், கவுன்சிலர்களும் இல்லை. ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழு ஆலோசனைகளையும் கேட்கவில்லை. அப்படியென்றால், இந்த திட்டத்தைச் செயல்படுத்த யார் முடிவெடுத்தது. எதற்காக முடிவெடுத்தார்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.

“வடிவேலு காமெடி போல உண்மையிலேயே பஸ் ஸ்டாண்டை காணவில்லை” : சு.வெங்கடேசன் எம்.பி சாடல்!

சு.வெங்கடேசன் எம்.பி.பேசுகையில், “பெரியார் பேருந்து நிலையம் நகரமைப்பு அனுமதியே இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இதுவே தனியார் செய்திருந்தால் அந்தக் கட்டிடம் இடிக்கப்பட்டுவிடும். மக்கள் வரிப் பணத்தில் கட்டப்பட்டுவிட்டதால் அனைத்து நிறைவு பெறும் திட்டங்களிலும் புதிதாக என்னென்ன மாற்றங்கள் செய்யலாம், மக்களுக்காக, நகர நலனுக்காக சிறப்பாக என்ன செய்யலாம் என ஆய்வு செய்தோம்.

நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கிணற்றைக் காணவில்லை என்று காமெடியாக சொன்னதுபோல் நிஜமாகவே மதுரை 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தால் ஏற்கெனவே இருந்த காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையத்தைக் காணவில்லை.

பேருந்து நிலையமே வணிக நோக்கத்திற்காக அழிக்கப்பட்டு மேலும் நெரிசல் ஏற்படுத்தும் வகையில் வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்கள் தேர்வு அடிப்படையிலேயே தவறுகள் நடந்துள்ளன.

மற்ற மாநகராட்சிகளில் நிறைவேற்றப்படும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்களில் 80 முதல் 90 திட்டங்கள் செய்யப்படுகின்றன. ஆனால், மதுரையில் வெறும் 14 திட்டங்கள், எல்லோமே பெரிய தொகையில் செய்யப்படுகின்றன. அதன் தரம் உரிய விதிமுறைகளோடு செயல்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதை அரசின் பிற நிறுவனங்கள் விசாரிக்கும்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories