தமிழ்நாடு

முதலிரவு அறையிலேயே தூக்கில் தொங்கிய மணமகன் : அதிர்ந்த மணப்பெண் - நடந்தது என்ன?

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மணமகன் ஒருவர் முதலிரவு அன்றே தூக்கி தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலிரவு அறையிலேயே தூக்கில் தொங்கிய மணமகன் : அதிர்ந்த மணப்பெண் - நடந்தது என்ன?
கோப்பு படம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

செங்கல்பட்டு மாவட்டம் போஸ்ட் நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருக்கும் அவரது அத்தை மகள் நந்தினி என்பவருக்கும் கடந்த 8ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், திருமணம் நடந்து முதலிரவு முடிந்த காலையில் மணமகள் நந்தினி அலறியுள்ளார். இதனால் வீட்டில் இருந்த உறவினர்கள் நந்தினியின் ரூமுக்குள் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது மணமகன் கார்த்திகேயன் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்து போலிஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலிஸார் மணமகளிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், “கார்த்திகேயன் பதற்றத்தில் இருந்தார். எனவே நான் பரவாயில்லை. நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று சமாதானம் செய்தேன். பாத்ரூம் சென்று வந்தவரை கூடவே சென்று அழைத்து வந்து பக்கத்தில் படுத்து உறங்கிவிட்டேன்.

பின்னர் காலையில் எழுந்தபோது பக்கத்தில் ஆள் இல்லாததைக் கண்டு தேடியபோதுதான் தூக்கில் தொங்கியபடி இறந்துகிடந்தார்” எனத் தெவித்துள்ளார்.

திருமனம் நடந்த அன்றே மணமகன் முதலிரவில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories