தமிழ்நாடு

“பெற்ற குழந்தையைக் கொடூரமாகத் தாக்கிய தாய் கைது” : காவல்துறை அதிரடி - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

பெற்ற குழந்தையை தாயே கொடூரமாகத் தாக்கிய சம்பவம் விழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“பெற்ற குழந்தையைக் கொடூரமாகத் தாக்கிய தாய் கைது”  : காவல்துறை அதிரடி - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விழுப்புரம் மாவட்டம், மணலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன். கூலி தொழிலாளியான இவருக்குக் கடந்த 2016ம் ஆண்டு ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த துளசி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு ஆண்குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் துளசி ஆந்திராவில் உள்ள தனது தாய்வீட்டிற்குச் சென்றுள்ளார். இதையடுத்து வீட்டிலிருந்த மனைவியின் செல்போனை வடிவழகன் எடுத்துப் பார்த்துள்ளார். இதில் தனது இரண்டாவது குழந்தையைத் துளசி கொடூரமாகத் தாக்கும் வீடியோக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் இதேபோன்று நான்கு வீடியோவும் இருந்துள்ளது.

குழந்தையைத் தாக்கும் வீடியோ கடந்த பிப்ரவரி மாதம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குழந்தைக்கு ரத்தம் வரும் வரை அடித்துவிட்டு அவரே சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது.

பெற்ற தாயே குழந்தையைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி காண்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது குறித்து கணவர் வடிவழகன், மனைவி துளசி மீது சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இவரின் புகார் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த பெண்ணைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய் தாக்கியதில் படுகாயமடைந்த குழந்தை சிகிச்சைக்குப் பிறகு தற்போது நலமுடன் இருப்பதாகவும், குழந்தையை உறவினர்கள் பராமரிப்பில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories