தமிழ்நாடு

காலை அறிவிப்பு; மாலை நிறைவேற்றம்.. அசுர வேகத்தில் செயல்படும் திமுக அரசு : பெட்ரோல் வரிக்குறைப்பு எப்போது?

2 கோடிக்கும் மேலான இரு சக்கர வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அதனை ஒப்பிடுகையில் டீசல் வாகனங்கள் குறைவு என்பதாலே அதற்குரிய வரி குறைப்பு அவசியமில்லை என்றே தற்போது டீசலுக்கு வரி குறைக்கப்படவில்லை.

காலை அறிவிப்பு; மாலை நிறைவேற்றம்.. அசுர வேகத்தில் செயல்படும் திமுக அரசு : பெட்ரோல் வரிக்குறைப்பு எப்போது?
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசின் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான தற்காலிக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லாத இ- பட்ஜெட் முறையில் தாக்கல் செய்தார். இந்த நிலையில் இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நிதித்துறை கூடுதல் செயலர் கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கடுமையான சூழலில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை ஆகும். கொரோனா சூழலால் வருவாய் இழப்பு, கூடுதல் செலவு, புதிதாக பதவியேற்றுள்ள அரசு என பல நெருக்கடியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

இனி வரும் காலத்தில் நிர்வாகம் மற்றும் ஆளுமை எவ்வாறு அமையும் என முன்னோடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை சரிசெய்வது, அரசின் சொத்துக்களை நிர்வகிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கையை அமைச்சர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

ஒட்டுமொத்த நிதி மேலாண்மை பொறுத்த வரையில் 15வது நிதிக்குழு தெரிவித்தபடி, அமைச்சர் அறிவித்தது பட்ஜெட் தற்காலிகமானது, கடனை குறைக்கவும், பெறுவதை தவிர்க்கும் படியும் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதை முழுமையாக செயல்படுத்தவில்லை என்றாலும் அடுத்து வரும் காலங்களுக்காக அதிகரிக்கப்படும். முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட மக்களின் தேவைக்கு ஏற்ற திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக நிதிநிலை அறிக்கையே என்றும், நிலையை சீர் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மூலதனத்தை பெருக்க கூடுதல் நிதி ஒதுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதை இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எதை செய்ய இயலும், எவ்வாறு செய்ய இயலும் என ஆராய்ந்து எடுக்கப்பட்டுள்ளது. 1500 கோடி ரூபாய் செலவில் புதிதாக கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்திற்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. 2 கோடிக்கும் மேலான இரு சக்கர வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அதனை ஒப்பிடுகையில் டீசல் வாகனங்கள் குறைவு என்பதாலே அதற்குரிய வரி குறைப்பு அவசியமில்லை என்றே தற்போது டீசலுக்கு வரி குறைக்கப்படவில்லை. பெட்ரோல் மீதான வரிக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

காலை அறிவிப்பு; மாலை நிறைவேற்றம்.. அசுர வேகத்தில் செயல்படும் திமுக அரசு : பெட்ரோல் வரிக்குறைப்பு எப்போது?

டாஸ்மாக் மூலமாக 35ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. டாஸ்மாக் வருமானத்தை பொறுத்தவரை இந்த ஒரு ஆண்டுக்கு 4-5% சதவிகிதம் குறைவு என்றும் கடைகள் குறைப்பு, பார்கள் திறக்கப்படவில்லை போன்ற காரணங்களால் வருவாய் குறைந்துள்ளது.இந்த ஆண்டு பல நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்ததால் நுகர்வு குறைந்துள்ளது. அதனை வரி உயர்த்தி வருவாயை சரி செய்திருக்கிறோம்.

இந்த 3 மாதத்தில் 40 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளது தமிழக அரசு ஒட்டுமொத்த செலவினங்களுக்காக கடன் வாங்கப்படுகிறது. தேர்தல் வாக்குறுதிகளுக்காக வாங்கப்படுகிறது என கூறமுடியாது. அவை தவிர்த்து அரசுக்கு செலவினங்கள் உள்ளது. இந்த ஆண்டு 92 ஆயிரத்து 484 கோடி கடன் வாங்க உத்தேசித்துள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்ட காகிதமில்லாத இ-பட்ஜெட் தாக்கலுக்கான செலவினங்கள் மாநில அரசு 40%, ஒன்றிய அரசு 60% என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசியலைமைப்பு சட்டத்தில் பயன்படுத்தப்படும் ஒன்றிய அரசு என்பதையே கூறினேன் என விளக்கமளித்தார்.

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது தொடர்பாக ஏற்கனவே உள்ள நடைமுறை தொடர்கிறது. வறுமைக்கோடு முறையை நாம் தற்போது பின்பற்றுவதில்லை. நியாயமான தகுதியான நபர்களுக்கு கண்டுபிடித்து 1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். கொரோனா காரணமாக அரசுப்பேருந்துகளில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. பெரும்பாலும் பின்தங்கிய மக்களே அதிகளவில் பயணம் செய்பவர்களாக உள்ளனர். விபத்து மற்றும் சுற்றுச்சூழல் மாசு குறைபாடு போன்ற காரணங்களுக்காக எல்லா நாடுகளிலும் பொதுபோக்குவரத்திற்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது என்றார். நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் யார் என ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என கூறினார்.

banner

Related Stories

Related Stories