தமிழ்நாடு

நாள் முழுவதும் தொடர் சோதனை; கணக்கில் வராத ₹25 லட்சம் ரொக்கம் பறிமுதல் - கைதாகிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்?

தமிழகம் முழுவதும் அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 25 லட்சத்திற்குமேல் கணக்கில் வராத பணம் பறிமுதல்.

நாள் முழுவதும் தொடர் சோதனை; கணக்கில் வராத ₹25 லட்சம் ரொக்கம் பறிமுதல் - கைதாகிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோர் பேரிலும் மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்களில் பெயரிலும் தனது பணி காலத்தில் இருந்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது சம்பந்தமாக அவர்கள் மீது கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நாள் முழுவதும் தொடர் சோதனை; கணக்கில் வராத ₹25 லட்சம் ரொக்கம் பறிமுதல் - கைதாகிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்?

இந்த விசாரணையை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என தமிழகம் முழுவதும் 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினரால் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் கணக்கில் வராத 25 லட்சத்து 56 ஆயிரம் மற்றும் பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories