தமிழ்நாடு

“WFH பணியாளர்களை 8 மணிநேரத்துக்கு மேல் பணிபுரிய வற்புறுத்தினால் நடவடிக்கை”  - அமைச்சர் கணேசன் எச்சரிக்கை!

வீட்டிலிருந்து பணிபுரியும் வேலையாட்களை 8 மணி நேரத்திற்கும் மேலாக பணிபுரிய வற்புறுத்தும் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் பேட்டி

“WFH பணியாளர்களை 8 மணிநேரத்துக்கு மேல் பணிபுரிய வற்புறுத்தினால் நடவடிக்கை”  - அமைச்சர் கணேசன் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில்  கிண்டி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தலைமை அலுவலகத்தில் துறை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் கலந்து கொண்டார். இதில் துறை ரீதியான பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

பின் தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதால் 51 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் 64 லட்சத்து 98 ஆயிரத்து 91 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 2017 முதல் 2019 வரை பதிவு புதுப்பிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பதிவை புதுப்பித்துக்கொள்ள ஆகஸ்ட் 27 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால் மேலும் பலர் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்குவது என்பதே முதல்வர் அவர்களின் எண்ணம். அதன் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் அல்லது தனிநபர் மீது மாவட்ட உதவி தொழிலாளர் நல ஆணையம் மூலம் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

குழந்தைகளை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு ஆறு மாதத்திலிருந்து இரண்டு ஆண்டுகாலம் வரை சிறை தண்டனை வழங்கப்படும். மேலும் 20 ஆயிரத்தில் இருந்து 50,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் சாலையோரங்களில் சுற்றித்திரியும் குழந்தைகளை கண்டறிந்து, அவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதமான முறையில் செயல்படுத்தி வருகிறது

கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணிபுரியும் வேலையாட்கள் 8 மணிநேரம் மட்டுமே பணிகளை செய்ய வேண்டும். 8 மணி நேரத்திற்கும் மேலாக பணிகள் செய்ய வற்புறுத்தும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான புகார்களை 1098 என்ற இலவச எண்ணின் மூலம் தெரிவித்துள்ளனர்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் மூலம் தொழிலாளர் நலத்துறை சார்பில் 64,965 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்களை ஆய்வு செய்யும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது வரும் ஒரு மாத காலத்திற்குள் இந்த மனுக்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும்.

banner

Related Stories

Related Stories