தமிழ்நாடு

சென்னையில் உச்சமடையும் கொரோனா தொற்று... நாடு முழுவதும் இதுவரை காணாத வேகத்தில் பரவல்! #Covid19

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,672 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உச்சமடையும் கொரோனா தொற்று... நாடு முழுவதும் இதுவரை காணாத வேகத்தில் பரவல்! #Covid19
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நாட்டில் முதன்முறையாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 1,03,558 பேருக்கு புதிதாகக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 478 பேர் கொரோனா தொற்றால் பலியாகினர். தமிழகத்திலும் கொரோனா தொற்று நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 3,672 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,03,479 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 79,442 கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,96,85,598 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 1,335 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,55,074 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 1,842 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,66,913 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 12,157 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 6 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,789 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories